Skip to main content

"ஜெயக்குமாரால் தான் கட்சி பலவீனமடைந்தது" - முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன்

Published on 03/02/2023 | Edited on 03/02/2023

 

former admk minister krinsnan talks about admk party 

 

அதிமுக ஓபிஎஸ் அணி துணை பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கு.ப.கிருஷ்ணன், ஈரோட்டில்  தங்கள் அணியின் கட்சித் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து பிறகு செய்தியாளர்களிடம் பேசினார், "இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணிகளை இணைக்கும் பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் முயற்சி அரசியலில் எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம் என்பதை உணர்த்துகிறது.

 

எங்களுக்கு மட்டும் தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும். உண்மையில், ஓபிஎஸ் சின்னத்தைப் பெறுவதற்கான படிவங்களில் கையெழுத்திடத் தயாராக இருக்கிறார். அதை இபிஎஸ்க்கு கொடுக்கவும் தயார் என்றார். ஆனால், அவர் அதை ஏற்கவில்லை. எனவே, எங்கள் வேட்பாளர் செந்தில் முருகனை வாபஸ் பெற மாட்டோம். தேசிய முற்போக்கு கூட்டணியில் இருக்கிறோம். எனவே, பா.ஜ.க. மற்றும் கூட்டணி தலைவர்களின் படங்கள் மற்றும் கொடிகளை பேனர்களிலும் பிரச்சாரங்களிலும் பயன்படுத்துகிறோம். எங்கள் தலைவர் ஓ.பி.எஸ். ஆனால், மோடி தேசத்தின் பிரதமர். அவர் உலகம் முழுவதும் மதிக்கப்படுபவர். அதனால் அவரது படத்தை பயன்படுத்துகிறோம். அவரது முகத்தை பயன்படுத்தி ஓட்டு வாங்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை.

 

எங்கள் கட்சி மட்டுமே உண்மையான அதிமுக. தொண்டர்கள் அனைவரும் ஓபிஎஸ் பின்னால் இருக்கிறார்கள். இபிஎஸ் அணித்தலைவர் செங்கோட்டையன் தன்னிடம் 98.5 சதவீத தொண்டர்கள் உள்ளனர் என்கிறார். அதை அவர் நிரூபிக்கட்டும். உண்மையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரால் தான் கட்சி பலவீனமடைந்தது. இப்போது கூட ஒற்றுமையும், கூட்டுத் தலைமையும் வேண்டும். ஆனால், இபிஎஸ் அதை ஏற்கவில்லை. இப்போது தேர்தல் ஆணையமே அவர் இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை நிராகரித்துவிட்டது. இபிஎஸ் தான் நீதிமன்றம் செல்லும் சூழ்நிலையை உருவாக்கினார். உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் ஓபிஎஸ் நிலைப்பாட்டை அங்கீகரித்து அவருக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்கும்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.