Skip to main content

வேட்பாளரை மறந்துவிட்டு மோடி பெயரைச் சொல்லி வாக்கு கேளுங்கள்! - அமித்ஷா 

Published on 22/02/2018 | Edited on 22/02/2018

கர்நாடக மாநிலத்தில் வரும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் இழந்த ஆட்சி அதிகாரத்தை மீண்டும் பிடிக்க பா.ஜ.க. முயற்சி செய்துவருகிறது. எடியூரப்பாவை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ள நிலையில், இரண்டு முறை கர்நாடகாவில் நடைபெற்ற பிரச்சாரங்களில் கலந்துகொண்டு பேசினார் பிரதமர் மோடி.

 

Amit

 

தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பணியில் ஈடுபடும் பா.ஜ.க. ஊழியர்களுக்கு பல முக்கிய வழிகாட்டுதல்களை அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா வழங்கிவருகிறார். நேற்று கர்நாடகாவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமித்ஷா, ‘வேட்பாளர்களை மறந்துவிடுங்கள். மோடியின் பெயரைச் சொல்லியும், தாமரையைக் காட்டியும் வாக்கு சேகரியுங்கள். நாம் இங்கு தொகுதிகளில் வெற்றிபெறுவதில் கவனம் செலுத்தாமல், வாக்குச்சாவடிகளில் வெற்றி பெறுவதில் கவனம் செலுத்தவேண்டும். அதிகமான வாக்குச்சாவடிகளில் நாம் வெற்றி பெறும்போது, நம்மால் நிச்சயமாக தேர்தலில் மாபெரும் வெற்றி பெறமுடியும்’ என அறிவுறுத்தியுள்ளார்.

 

தேர்தல் ஆணையத்தின் அறிக்கையின் படி, கர்நாடக மாநிலத்தில் சுமார் 56 ஆயிரம் வாக்குச்சாவடிகள் உள்ளன. சராசரியாக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 1,200 வாக்காளர்கள் இருக்கின்றனர். இதில் பெரும்பாலான வாக்களர்களை பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க வைப்பதே அமித்ஷாவின் நோக்கமாக உள்ளது.

 

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெறுவதற்கு மூலக்காரணமாக இருந்தது வாக்குச்சாவடிகள் வாரியாக அதிக வாக்குகளைப் பெறுவதுதான். அதேபோல், சமீபத்தில் நடந்துமுடிந்த ராஜஸ்தான் இடைத்தேர்தலில் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் பா.ஜ.க. ஒற்றை இலக்கங்களிலேயே வாக்குகளைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.