Skip to main content

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வின் முதல் வாரம்: வாஷ் அவுட் ஆன மக்களவை

Published on 17/03/2023 | Edited on 17/03/2023

 

First week of the second session of the series; A washed out Lok Sabha

 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31ம் தொடங்கி பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மார்ச் 13ம் தேதி தொடங்கிய இரண்டாவது அமர்வு வரும் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

 

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கிய நாளில் இருந்தே ஆளுங்கட்சியான பாஜகவின் எம்.பி.க்கள் ராகுல் காந்தி வெளிநாட்டிற்குச் சென்று நாடாளுமன்றப் பிரச்சனைகள் குறித்து விவாதித்து இந்திய ஜனநாயகத்தை இழிவு செய்துவிட்டார் என்றும், அதற்கு அவர் மன்னிப்பு கோர வேண்டுமென்றும் முழக்கங்கள் எழுப்புவதும் அதேபோல், எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை வேண்டும், பணவீக்கம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பன உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்புவதும் தொடர்ந்தது. இதனால் நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட, நாடாளுமன்றத்தை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிடுவதும், தொடர்ந்து பிற்பகல் 2 மணிக்கு கூடும் அவையில் மீண்டும் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் எம்.பிக்கள் மாறி மாறி முழக்கங்கள் எழுப்பி அமளியில் ஈடுபடுவதும் பின்னர் மறுநாள் வரை நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிடுவதும் மூன்று நாட்களாக தொடர்கதையாகிப் போனது.

 

இந்நிலையில் 4 ஆவது நாளாக நேற்று கூடிய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நேற்றும் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. அவை ஒத்திவைக்கப்பட்டதும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட ஏராளமான எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் மோடி மற்றும் அதானி புகைப்படங்களுடன் மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜகவினர் கூறுகின்றனர். ஆனால், ராகுல் காந்தி இந்தியாவிற்கு எதிராக எந்த ஒரு கருத்தையும் கூறவில்லை. ஆளும் பாஜக நாடாளுமன்றத்தை முழுமையாக முடக்கியுள்ளது. இரண்டாம் அமர்வு தொடங்கியதில் இருந்து எதிர்க்கட்சிகளை பேச விடாமல் ஆளுங்கட்சியினர் முட்டுக்கட்டை போடுகிறார்கள் என எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். 

 

நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து அமைதியாக பேரணி சென்று அமலாக்கத்துறையிடம் மனு கொடுக்கச் சென்றோம். ஆனால், அதையும் பாஜக காவல்துறையினரை வைத்து தடுத்தது என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாஜகவை குற்றம் சாட்டியுள்ளனர். தொடர்ந்து பிற்பகல் 2 மணியளவில் மீண்டும் அவை கூடியவுடன் மீண்டும் அமளி தொடர்ந்ததால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து நான்கு நாட்களாக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடுவதால் எந்த நடவடிக்கையும் இல்லாமல் அவை நான்காவது நாளாக ஒத்திவைக்கப்பட்டது.

 

இந்நிலையில் ஐந்தாவது நாளாக இன்றும் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 5 ஆவது நாளாக முடங்கின. இன்று மக்களவை துவங்கியதும் சபாநாயகர் ஓம் பிர்லா கேள்வி நேரத்தை துவங்கலாம் என அறிவித்தார். ஆனால் உடனே கடும் அமளி ஏற்பட்டது. இதன் காரணமாக மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் வரும் திங்கள் கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்களவை கூட்டத்தொடர் முழுவதும் எந்த ஒரு நடவடிக்கையும் இன்றி இந்த வாரம் முடிவிற்கு வந்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சோனியா காந்தி எம்.பி.யாக பதவியேற்பு!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Sonia Gandhi sworn in as MP

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் 54 பேர் நேற்றுடன் (03.04.2024) ஓய்வு பெற்றனர். அவர்களில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஒருவர் ஆவார். இதன் மூலம் மன்மோகன் சிங்கின் 33 ஆண்டுகால அரசியல் பயணம் நேற்றுடன் நிறைவு பெற்றது. இவருடன் 9 மத்திய அமைச்சர்களும் ஓய்வு பெற்றனர். அதே சமயம் இந்த காலியிடங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்தி இன்று (04.04.2024) பதவியேற்றார். சோனியா காந்திக்கு மாநிலங்களவை தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜெகதீப் தங்கர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதே போன்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி குமார் வைஷ்ணவ் உள்ளிட்ட 14 பேர் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டனர். கடந்த 1999 ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச மாநிலம் அமேதி, கர்நாடக மாநிலம் பெல்லாரி தொகுதியில் இருந்து முதன் முதலாக சோனியா காந்தி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 5 முறை மக்களவைத் தேர்தலில் வென்ற சோனியா காந்தி ராஜஸ்தானில் இருந்து காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது பதவியேற்றுள்ளார்.

முன்னதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே சோனியா காந்தியை சந்தித்து பூங்கொத்து கொடுத்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார். இது குறித்து மல்லிகார்ஜுன் கார்கே தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “இன்று ராஜ்யசபாவில் பதவியேற்று, தனது புதிய இன்னிங்ஸைத் தொடங்கும் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு எழுச்சி மிக்க எனது நல்வாழ்த்துகள். பாராளுமன்ற உத்தியை தொடர்ந்து வழிநடத்தும் அவர்,  மக்களவையில் 25 ஆண்டுகள் பணியாற்றி முடித்துள்ளார். இப்போது நானும் எனது சக உறுப்பினர்களும் ராஜ்யசபையில் அவரது வரவை எதிர்பார்க்கிறோம். அவரது பதவிக் காலம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“பச்சை துரோகம்” - விஜய் சேதுபதியின் விழிப்புணர்வு வீடியோ

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
vijay sethupathi election video

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் தேதி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் அன்றே நடைபெறும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறவுள்ளது. தி.மு.க, காங்கிரஸ், இடது சாரிகள், வி.சி.க, உள்ளிட்ட சில கட்சிகள் இந்தியா கூட்டணியிலும் அ.தி.மு.க, தே.மு.தி.க தனி கூட்டணியிலும் பா.ஜ.க, பா.ம.க தேசிய ஜனநாயக கூடணியிலும் தேர்தலை எதிர்கொள்கின்றனர். இதையொட்டி தங்கள் கட்சி வேட்பாளர்களுடன் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.  

இந்த நிலையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என விஜய் சேதுபதி வலியுறுத்தும் தேர்தல் விழிப்புணர்வு வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் விஜய் சேதுபதி பேசியதாவது, “நாம எல்லாரும் ஆசையா எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த தேர்தல் வந்துவிட்டது. வழக்கமாக தேர்தல் வரும்போது எல்லாருக்கும் ஒரு மனப்பான்மை இருக்கும். யார் வந்தா நமக்கென்ன... இல்லை யார் காசு கொடுக்கிறாங்களோ அவங்களுக்கு ஓட்டு போடுவோம்... ஒட்டு போட்டு ஒன்னும் ஆகப் போறதில்லை... இது போன்ற மனநிலையை தூக்கி ஓரம் வைச்சிடுங்க. நாம, நமக்காக இல்லைன்னாலும் நம்ம குழந்தைகளோட எதிர்காலத்திற்கும், நம்ம அடுத்த தலைமுறையோட எதிர்காலத்திற்கும் நிச்சயமா ஓட்டு போட வேண்டும்.   

காசு வாங்கிட்டு ஓட்டு போடுவது, காசுக்காக ஓட்டை விற்பது எவ்ளோ பெரிய துரோகமோ, அதை விட பச்சை துரோகம் ஓட்டு போடாமல் இருப்பது. உங்களுக்கு புடிச்சவங்க புடிக்காதவங்க யாராக இருந்தாலும் சரி, அவுங்க யார் என்னன்னு தெரிந்து கொள்ளுங்கள். அவங்களால நமக்கு என்ன பயன் என்பதை விட இந்த நாட்டிற்கு என்ன பயன் என்பதை யோசித்து பாருங்க. அதில் நம்முடைய சுயநலமும் இருக்கு. நாமெல்லாம் சேர்ந்தது தானே நாடு. 

நாம் என்பது இன்றைக்கும் மட்டும் பார்ப்பதா, அல்லது நாளைக்கு நம்முடைய குழந்தைகள் வாழப்போகிற எதிர்காலைத் பற்றியும் சிந்திக்கிறதா. நம்முடைய குழந்தைகளுடைய எதிர்காலம் ரொம்ப முக்கியம். நம்மை ஆளப்போவது யார். ஆட்சியை யார்கிட்ட கொடுக்கப் போறோம். அவங்களுக்கு என்ன தகுதி இருக்கு. இதுக்கு முன்னாடி அவுங்க என்ன செஞ்சிருக்காங்க, என்ன சொல்றாங்க என்பதை அலசி ஆராஞ்சி ஓட்டு போடுங்க. இதுவரை அரசியல் செய்திகளை கேட்கவில்லை என்றாலும் பேசவில்லைன்றாலும் பார்க்கவில்லை என்றாலும் சரி, இன்றையிலிருந்து ஓட்டு போடுகிற நாள் வரை அரசியல் பற்றி பேசுங்க. தெளிவா, சிந்தித்து செயல்பட்டு வாக்களியுங்க” என்றார்.