Skip to main content

தேமுதிகவின் இறுதி அத்தியாயம் எழுதப்படுகிறது: மு.ஞானமூர்த்தி பேட்டி

Published on 09/03/2019 | Edited on 09/03/2019

 

ஒரே நாளில் திமுகவுடனும், அதிமுகவுடன் தேமுதிக பேசியதாக செய்திகள் வெளியானது குறித்தும், தேமுதிக அலுவலகத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அளித்தது தொடர்பாகவும் பல்வேறு அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 

திமுகவின் செந்துறை வடக்கு ஒன்றிய செயலாளர் மு.ஞானமூர்த்தி நக்கீரன் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், 
 

தேமுதிகவின் இருதி அத்தியாயம் இந்தத் தேர்தலோடு முடிவடைகிறது. பிரேமலதாவின் நிஜ முகம் தெரிந்தது. இயலாமையும் வெறுப்பும் கோபமும் வார்த்தையில் விழுந்தது. அண்ணன் துரைமுருகனின் ஒற்றை சொல் தேமுதிகவையே இல்லாதாக்கிவிட்டது. 
 

premalatha vijayakanth dmdk


 

தேமுதிகவினர் வந்து பேசியதை தலைவருக்கு தெரிவிக்க வேண்டிய அவசரமில்லை. அப்படியொன்றும் முக்கியத்துவம் வாய்ந்ததில்லை என்ற சொல் தேமுதிகவின் பிம்பத்தையே தகர்த்துவிட்டது. 
 

அவ்வளவு வொர்த் இல்லை என்பதை அவர்களுக்கே புரியவைத்த தருணம். பிரமேலதா, விஜயகாந்த் மனைவி என்பதை தாண்டி அவர் முக்கியத்துவம் இல்லை. தேமுதிக இத்தனை ஆண்டுகளாக மக்கள் நலனுக்காக பேராடியிருக்கிறதா? குறைந்தபட்சம் கண்டன ஆர்ப்பார்ட்டமாவது நடத்தியிருக்கிறதா? 
 

தேர்தல் நேரத்தில் நல்ல விலைபேசலாம் என்ற வியாபார நோக்கோடு அமெரிக்காவில் மருத்துவசிகிச்சையில் இருந்த விஜயகாந்தை அழைத்து வந்து களைப்பு மிகுதியால் விமானநிலையத்திலேயே ஓய்வெடுக்கவேண்டிய நிலையில் இருப்பவரை முன்னிறுத்தி பேரம் பேசும் அயோக்கியத்தனத்திற்கு பெயர் அரசியலா?
 

vijayakanth


அதிமுகவில் 37 எம்பிகள் இருந்தும் தமிழ்நாட்டிற்கு என்ன பயன் என்கிறார். உண்மை பிறகு ஏன் அவர்களிடத்தில் தொகுதிக்கு பேரம் பேசவேண்டும்? தகுதியற்றவர்களை கொண்ட கட்சி என்ற பிறகு திரும்ப திரும்ப ஏன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்? தேமுதிகவால் தமிழகத்திற்கு ஏதாவது நன்மை உண்டா? மக்கள் பிரச்சனைகளுக்காக போராடியதுண்டா? நீட் போன்ற திணிப்புகளை கண்டித்து தெருவில் இறங்கி கண்டனத்தை பதிவு செய்ததுண்டா?

 

மணப்பெண் என்றால் 10 பேர் பார்க்கதான் வருவார்கள் என்கிறார். சரி, ஆனால் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் தட்டு மாத்த முடியுமா என பார்ப்பது எவ்வளவு கேவலம்?
 

அண்ணன் துரைமுருகன் திமுக தலைமை பற்றி இவர்களோடு பேசினாராம். அவரை அறிந்தவர்களுக்கு அவரின் செயல்பாடுகள் தெரியும். 
 

தேமுதிக அழிவதற்கு யாரும் காரணமல்ல, பிரேமலதாவை தவிர.. கட்சியை கம்பெனி லெவலுக்கு நகர்த்தியது இவர்தான். உடல்நலியுற்று கணவர் இருக்கும்போது, அவரை வைத்து எவ்வளவு சம்பாதிக்க முடியுமென முயற்சிப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. 
 

ஆனால் இவர்களின் பேராசையும் தன்னிலையறியாத செயலும் தேமுதிகவிற்கு இறுதி அத்தியாயத்தை எழுதிக்கொண்டிருக்கிறது. 
 

ஐம்பது வருட அரசியல் அனுபவம் தளபதியாரின் இன்றைய நக்கலில் தெரிந்தது. துரைமுருகன் வீட்டிர்க்கு போலீசார் பாதுகாப்பு போட்டிருக்கிரார்கள் என நிருபர்கள் கேட்டபோது, ''இனி யாரும் பேச்சுவார்த்தைக்கு வந்துவிடுவார்களோ என ஆட்சியாளர்கள் பாதுகாப்பு போட்டிருப்பார்கள்'' என்றார்.


 

mg



மக்கள் செல்வாக்கு இருப்பதாக சொல்கிறார் பிரேமலதா, மக்கள் பிரச்சனைகளை கையில் எடுத்து போராடியிருக்கிராரா? விஜயகாந்த் உடல்நல குறைவிற்கு பிறகு மொத்தமாக அக்காவும் தம்பியும் ஆக்கரமித்தவுடன், கூட இருந்தவர்கள்கூட ஒவ்வொருவராக ஓடிவிட்டநிலையில் மக்கள் ஆதரவு இருப்பதென்பது நல்ல நகைச்சுவை.
 

கடைசியாக ஒரேயொரு கேள்வி. விஜயகாந்தை பேசவிடுங்கள். பத்திரிகையாளர்கள் முன்பு சில வார்த்தைகள் பேசட்டும். அப்போது தெரியும் உண்மைநிலை. 
 

பிரேமலதாவும் சுதிஷும் விஜயகாந்தை வைத்து பிழைக்க பார்க்கிறார்கள். அது இந்த தேர்தலோடு முடிந்து போகும். தேமுதிகவின் இறுதி அத்தியாயம் எழுதப்படுகிறது. இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்குவதில் தாமதம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

மத்திய அரசால், இந்திய குடிமகனுக்கான உயரிய விருதுகளாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் என மூன்று அடுக்குகளாக இந்த விருதுகள் இருக்கிறது. இந்த விருதுகளுக்காக மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சமூக பணி, என பல்வேறு தளங்களில் சிறப்பாக பணியாற்றியவர்களை பரிந்துரை செய்யப்பட்டு பின்னர், விருது வழங்கும் குழுவால் தேர்வு செய்யப்படுகிறார்கள். 

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரியில் அறிவித்தது. இதில் மறைந்த நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

பத்ம விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (22.04.2024) நடைபெற்ற விழாவில் 3 பத்ம விபூஷன், 8 பத்ம பூஷன் மற்றும் 55 பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட்டன. அனைவருக்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார். இதில் பிரபல பாடகி உஷா உதூப் மற்றும் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கும் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

நேற்றைய விழாவில் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படுவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு விருது வழங்கப்படவில்லை. அதனால் அடுத்தடுத்த கட்ட விழாக்களில் விஜயகாந்துக்கு விருது வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

தேமுதிக ஒன்றிய செயலாளரை தாக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
AIADMK union secretary attacked DMK union secretary in Karur!

கரூர் மாவட்டத்தில் தேமுதிக  ஒன்றிய செயலாளரை கூட்டணியில் உள்ள அதிமுக ஒன்றிய செயலாளர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் கடவூர் தேமுதிக தெற்கு ஒன்றிய  செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான ஆல்வின் என்பவர் பாலவிடுதி காவல் நிலையம் அருகே தன் கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டு இருக்கையில் அவ்வழியே வந்த அதிமுகவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வேண்டுமென்றே ஆல்வின் இடம் வாய் தகராறு செய்துள்ளார்.

இதற்கு ஆல்வின் சாதாரணமாக பதில் அளித்ததையடுத்து ஏற்கனவே தேர்தல் பணப்பட்டுவடாவில் ஏற்பட்ட பகையில் அதிமுக கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான ரமேஷ் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து காவல் நிலையம் முன்பே கொலை செய்யும் நோக்கோடு ரமேஷ் ஆல்வினை தாக்கி உள்ளார். இதனால் படுகாயம் அடைந்த ரமேஷ் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட ஆல்வின் கூறுகையில், கொலைவெறி தாக்குதல் நடத்திய அதிமுக கவுன்சிலர் ரமேஷை மாவட்ட காவல்துறை கைது செய்திட வேண்டும். அவரை குண்டர் சட்டத்தில் அடைத்திட வேண்டும். அதிமுக, தேமுதிக கூட்டணியில் இருந்தும் அதிமுகவினர்  தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் தான் பெரும் அளவில் மன உளைச்சல் அடைந்ததாகவும் இதற்கு அதிமுக தலைமை பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்ததும் கூட்டணி முடிந்தது போல அதிமுகவினர் தங்கள் வேலையை காட்ட துவங்க உள்ளனர் என பாதிக்கப்பட்டவருடன் வந்த தேமுதிக நிர்வாகிகள் வேதனையுடன் புலம்பினர்.