Skip to main content

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பயம் போய்விட்டது; அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

Published on 17/02/2020 | Edited on 17/02/2020

 

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக கட்சியினரிடையே துளிகூட பயம் இல்லாமல் போய்விட்டது என அதிமுக அமைச்சரே பேசியது இலைக்கூடாரத்தினரை முனுமுனுக்கவே செய்திருக்கிறது.

 

O. S. Manian



 

 நாகை மாவட்டம் சீர்காழியில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமைதாங்கி பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன், "தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக ஒரு சிறப்பான அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். இந்தியாவில் இதுதான் முதல் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகும். எனவே அரசாணை வருகிற நேரத்தில் பாதிப்புகள் இல்லாத வகையில் மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் வகையில் சட்டம் இருக்க வேண்டும் என சட்ட நிபுணர்களை கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என முதல்வர் பழனிச்சாமி கூறியிருக்கிறார்.


 

ஆக ஜெயலலிதா செயல்படுத்திய எந்தத் திட்டத்தையும் அணு அளவும் குறையாமல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு முழுமையாக வழங்கிக் கொண்டிருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் காவிரி டெல்டா மாவட்டங்களில் வெற்றி வாய்ப்பை நாம் பெரிய அளவில் இழந்துவிட்டோம், என காரனம்கூறுவது ஏற்புடையது அல்ல. மீத்தேன் ஹைட்ரோ கார்பன், குடியுரிமை திருத்த சட்டம், போன்ற பல காரணங்கள் தான் என சிலர்  கூறுகிறார்கள். நம்முடைய தோல்விக்கு மீத்தேன்,ஹைட்ரோ கார்பன் மட்டுமல்ல மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் ஒருபோதும் தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என முதல்வர் உறுதிப்படுத்திக் கூறிவிட்டார்.
 

 ஆனால் எதிர்க்கட்சிகள் பொய்களை கூறி மக்களை குழப்புகின்றனர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவினரிடையே பயம் என்பதே இல்லாமல் போய் விட்டது. அது இனிமேல் மாறும், எல்லாம் சரியாகிவிடும்." என அவர் கூறினார்.


 



 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.