style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
2019 பாராளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி (நாளை) நடைபெற உள்ளது. இதற்காக வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் பணிகள் நடந்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இன்று சென்னையில் வாக்களிக்கும் முறை குறித்து செயல் விளக்கம் அளித்தார்.