Advertisment

பா.ம.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிரமுகர்! 

Excluded personality from PMK

Advertisment

திருவள்ளூர் மாவட்டம், கல்பாளையத்தைச் சேர்ந்த பா.ம.க. பிரமுகரான கோ.ரவிராஜ் என்பவர், அக்கட்சியின் நற்பெயருக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக பா.ம.க. தலைமை நிலையம் அறிவித்துள்ளது.

இது குறித்து பா.ம.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “திருவள்ளூர் மாவட்டம், கல்பாளையத்தைச் சேர்ந்த கோ.ரவிராஜ் என்பவர் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டு வருவதால், இன்று (27.08.2023) ஞாயிற்றுக்கிழமை முதல் கட்சி மற்றும் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார். அவருடன் பா.ம.க., வன்னியர் சங்கம் மற்றும் துணை அமைப்பினர் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

pmk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe