Skip to main content

இப்பொழுதும் சொல்கிறேன்... தி.மு.க குடும்ப கட்சிதான்! மு.க.ஸ்டாலின் பேச்சு

Published on 05/09/2019 | Edited on 05/09/2019

 

தி.மு.கழக உயர் நிலை திட்டக்குழு உறுப்பினர்களில் ஒருவரான மு.பெ.சாமிநாதன் இல்லத்திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

பின்னர் பேசிய ஸ்டாலின், 

நான் நினைத்துப் பார்க்கின்றேன் மு.பெ.சாமிநாதன் இளைஞர் அணியின் மாவட்ட அமைப்பாளராக இருந்த போது, ஈரோடு மாவட்டத்தில் இளைஞர் அணியின் பாசறை கூட்டங்களை மண்ணாதபாளையம் எனும் இடத்தில் இரண்டு நாட்கள் நடத்தினோம்.
 

mkstalin


 

ஒரு பாசறை கூட்டத்தை எப்படி நடத்திட வேண்டும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அந்த கூட்டத்தை நம்முடைய சாமிநாதன் அவர்கள் நடத்திக் காட்டினார். அப்படி நடைபெற்ற கூட்டத்தில் இரண்டு நாட்களும் பங்கேற்ற கழகத் தோழர்களுக்கும்,  இளைஞர்களுக்கும், உணவு வழங்கி உபசரிக்கும் பணியையும் அவர் தொடர்ந்து செய்தார். அந்தப் பணியை ஆற்றிக் கொண்டிருக்கும் பொழுது அவருடைய தாயார் சமையல் கூடத்தில் நின்றுகொண்டு பரிமாற கூடிய காட்சிகளை எல்லாம் நான் என்றைக்கும் நினைத்துப் பார்க்கிறேன்.
 

தி.மு.கழகம் ஒரு குடும்பம் என்பதற்கு இதெல்லாம் தான் ஒரு உதாரணம்.
 

ஏதோ குடும்பக் கட்சி - குடும்பக் கட்சி என்று சொல்கிறார்கள். இப்பொழுதும் சொல்கிறேன்... தி.மு.க குடும்ப கட்சிதான்!


 

அண்ணா இந்த இயக்கத்தை உருவாக்கிய நேரத்திலேயே, அண்ணன் - தம்பி, மாமா - மச்சான், அக்கா - தங்கை, என்றார். அதைத்தான் தலைவர் கலைஞர் அவர்கள் ஒரே வரியில், "என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே" என்று சொன்னார்.
 

எனவே, அந்த குடும்பப் பாச உணர்வோடு அவருடைய தாயார் உணவு பரிமாறிய அந்த காட்சியை எல்லாம் நான் நினைத்துப் பார்க்கிறேன். இந்த மேடையில் இன்றைக்கும் அவர் அமர்ந்திருக்கிறார்கள்.
 

எனவே, நம்முடைய சாமிநாதன் அவர்கள், அவருடைய இல்ல மணவிழா நிகழ்ச்சியை எழுச்சியோடு - மிகப் பெருமையோடு - பூரிப்போடு, நாமெல்லாம் பாராட்டும் அளவிற்கு அவர் இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்.
 

தலைவர் கலைஞர் அவர்கள் இடத்தில் சாமிநாதன் அவர்கள் எந்த அளவிற்கு மரியாதை, மதிப்பு வைத்திருந்தார். அன்பை பொழிந்தாரோ, அதில் இம்மியளவும் குறையாமல் அதை இன்றைக்கும் என்னிடத்தில் காட்டிக் கொண்டிருக்கிறார்.
 

எனக்கு கிடைத்து இருக்கும் சில படைவீரர்கள் - தளபதிகள், அந்த தளபதிகளில் இளைஞர் அணியில் இருந்து ஒரு சிறப்பிற்குரிய இடத்தில், பட்டியலில் பெற்றிருக்கும் முக்கியமான ஒருவர் இருக்கிறார் என்று சொன்னால், நிச்சயமாக அது சாமிநாதன் அவர்களாகத்தான் இருக்கும்.


 

சில தோழர்கள், நம் முன்னோடிகள், கழகத்தில் நிலவும் சில பிரச்சினைகளை வந்து எடுத்துச் சொல்வார்கள். அப்படி சொல்கிறபோது நான் சில விளக்கங்களை சொன்னால் அதனை மறுத்தும் பேசுவார்கள். நியாயத்தை எடுத்துச் சொல்வார்கள். ஆனால், சாமிநாதன் அவர்கள் எதையும் மறுக்காமல் நியாயத்தை கூட எடுத்துச் சொல்லாமல் அதை அப்படியே, ஐந்தும் மூன்றும் 8 என்று நான் சொல்லாமல், 7 என்று சொன்னால்கூட அதை சரி என்று சொல்வார்.
 

அந்தளவிற்கு இந்த இயக்கத்தின் மீதும் எங்கள் மீதும் அளவுகடந்த பாசத்தையும் அன்பையும் தொடர்ந்து பொழிந்து கொண்டிருக்கக் கூடியவர்.
 

எனவே, இன்னும் அவரை பாராட்டினால் அது என்னையே பாராட்டிக் கொண்டிருப்பது போல் ஆகிவிடும். அதனால், நான் அதிகம் பாராட்ட விரும்பவில்லை. எனவே, இது நம்முடைய குடும்பத்தில் இருக்கும் திருமணமாக நான் மட்டுமல்ல இந்த மேடையில் இருக்கக்கூடியவர்களும், இங்கு வந்திருக்கக் கூடிய நீங்களும் அந்த உணர்வோடு தான் இங்கு வந்திருக்கிறீர்கள். இவ்வாறு பேசினார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.