Skip to main content

“பண்ருட்டி ராமச்சந்திரன் அரசியலில் சகுனி..” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Published on 19/03/2023 | Edited on 19/03/2023

 

Ex Minister Jeyakumar addressed press and comment about ops and panruti ramachandran

 

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தேதி கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டு, நேற்று சனிக்கிழமை இ.பி.எஸ். மனு தாக்கல் செய்துள்ளார். இ.பி.எஸ். மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால், இன்று வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததும் அவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார் என சொல்லப்பட்டுவந்தது. இந்நிலையில், நேற்று சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி முன்னிலையில் மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ., சார்பில் ‘அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்’ என முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணை வரவுள்ளது. 

 

இந்நிலையில், இ.பி.எஸ். அணி சார்பிலிருந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று (19ம் தேதி) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “ஓ.பி.எஸ்., பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோரின் பேட்டியை விரக்தியின் உச்சமாகத்தான் நான் பார்க்கிறேன். ஓ.பி.எஸ். பிக்பாக்கெட் என்கிறார். ஒவ்வொரு அதிமுக தொண்டனும் கோயிலாக பார்க்கும் எம்.ஜி.ஆர். மாளிகையை (அதிமுக தலைமை அலுவலகம்) ஓ.பி.எஸ். தலைமையில் குண்டர்கள் வந்து சூறையாடியது தான் பிக்பாக்கெட். இதனை நாங்கள் நீதிமன்றத்திற்கு எடுத்து சென்று அவர் மீது கிரிமினல் வழக்கு போடப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தன்னிடம் இருந்து ஓ.பி.எஸ். அமைச்சர் பதவியை பிடுங்கிக்கொண்டார் என்று தெரிவித்துள்ளார். அதேபோல், பதவி வெறியில் என்னிடம் இருந்து நிதித்துறையை பிடுங்கினார். இதுவெல்லாம் தான் பிக்பாக்கெட்.

 

கட்சியின் நலனுக்காக அவர் எந்தக் காலத்திலாவது செயல்பட்டுள்ளாரா. ஆரம்ப காலத்தில், அவருக்கு எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவை தெரியாது. அவரைப் பொறுத்தவரையில் அவரின் தலைவர்கள், வி.கே. சசிகலாவும், டி.டி.வி. தினகரனும்தான்.

 

தன் உடல் நலம் பாராமல் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஜெயலலிதா அதிமுகவை அரியணையில் ஏற்றினார். பின் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு ஆட்சியை கவிழ்க்க நினைத்தால் அது எவ்வளவு பெரிய மாபெரும் துரோகம். எடப்பாடி, சிறப்பான ஆட்சி நடத்திக்கொண்டிருந்தபோது, திமுக கொண்டுவந்த தீர்மானத்திற்கு ஒத்து ஊதினார். ஆனால், எடப்பாடி அவற்றையெல்லாம் மறந்துவிட்டு, ஜெயலலிதா ஆட்சி தொடர வேண்டும் என எண்ணி அவரை கட்சியில் சேர்த்தார். அப்போது அவர் (ஓ.பி.எஸ்.) ஜெயலலிதாவின் மரணத்தில் அந்தக் குடும்பத்தின் மீது சந்தேகம் இருக்கிறது விசாரணை கமிஷன் போடவேண்டும் என்றார். அதை ஏற்ற எடப்பாடி விசாரணை கமிஷன் அமைத்தார்.  

விசாரணை கமிஷன் அமைக்கச் சொன்ன அவருக்கு பல முறை கமிஷனிலிருந்து சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. கடைசியில் தான் சென்றார். அப்போது கமிஷனில் ‘ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இல்லை’ என்றார். இது எவ்வளவு பெரிய முரண்.

 

அதேபோல், 22 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் வந்தது. அதில், 10 அல்லது 9 தொகுதிகளில் அதிமுக வென்றால் தான் ஆட்சியை தக்கவைக்கமுடியும். அந்தத் தேர்தலில் எதிர் கட்சி பணமெல்லாம் செலவழித்தாலும், அதையெல்லாம் மீறி நாங்கள் 9 இடங்களில் வென்று ஆட்சியை தக்கவைத்தோம். அந்த 22ல் பெரியகுளமும், ஆண்டிபட்டியும் அடக்கம். அதில் உங்களால் வெற்றி பெற முடிந்ததா.  நாடாளுமன்றத்துடன் சேர்ந்து நடைபெற்ற அந்த இடைத் தேர்தலில் தன் மகன் மட்டும் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என கோடிக்கணக்கான ரூபாயை செலவு செய்து அவரது மகனை வெற்றி பெறவைத்து, இடைத் தேர்தல் நடந்த இரண்டு சட்டமன்றத் தொகுதியிலும் அதிமுக வேட்பாளரை தோற்கடிக்கிறார். அதன்பிறகு வந்த பொதுத் தேர்தலில் அவரின் மாவட்டத்தில் அவர் மட்டுமே வெற்றி பெறுகிறார். மற்றவர்களை வெற்றி பெறவைத்தாரா. அவரை பொறுத்தவரையில் கட்சி எப்படி போனாலும், அவருக்கு எடப்பாடி முதல்வராக வரக்கூடாது என எண்ணம். 

 

ஆமை புகுந்த வீடு உருப்படாது என்பார்கள். அதுபோல், பண்ருட்டியார் போன எந்தக் கட்சியாவது உருப்பட்டிருக்கிறதா. அவர் ஓ.பி.எஸ்.ஸிடம் எவ்வளவு பணம் வாங்கினார் என்பது தெரியவில்லை. அந்தப் பணத்திற்கு கை கூலியாக, எடப்பாடியையும், தலைமைக் கழக நிர்வாகிகளையும் தரக்குறைவாக பேசியுள்ளார். வயதானவர் பேச்சில் ஒரு அளவு வேண்டாமா. அவருக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தமே கிடையாது. மகாபாரதத்தில் எப்படி சகுனியோ அதுபோல், அரசியலில் பண்ருட்டி ராமச்சந்திரனை சகுனி என சொல்லலாம். எடப்பாடியின் எழுச்சியை ஓ.பி.எஸ்.ஆல் பொறுத்துக்கொள்ள முடியவில்லை” என்று தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.