Advertisment

''அவர் பேசுவதெல்லாம் அப்பட்டமான பொய்'' - வைகோ குற்றச்சாட்டு

publive-image

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுகள் மற்றும் செயல்பாடுகளை திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் விமர்சித்து வருகின்றன. ஆன்லைன் ரம்மிக்கு எதிரான சட்டத்திருத்த மசோதாவிற்கு விளக்கம் கேட்டு நேற்று தமிழக ஆளுநர் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இந்த நிலையில் ஆளுநர் தமிழகத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடுவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Advertisment

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின்68வது பிறந்தநாள் விழா சென்னையில் மதிமுக சார்பில் இன்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ''அரசியல் சட்டத்திற்கு விரோதமாகத்தான் ஆளுநர் செயல்படுகிறார். அவர் பிஜேபியின் கைப்பாவையாக ஊதுகுழலாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அரசியல் சட்டம் அரங்கேறிய நாள் இந்த நாள். இன்று அவர் பேசுவதெல்லாம் பொய். சொல்வதெல்லாம் அப்பட்டமான பொய். அவர் தமிழ்நாட்டிற்கு விரோதமாகச் செயல்படுகிறார் என்று நான் குற்றம் சாட்டுகிறேன்'' என்றார்.

Advertisment

mdmk governor vaiko
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe