ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது முதல்வர் பதவிக்கு டிடிவி தினகரன் முயற்சித்ததாக மன்னார்குடி பொதுக்கூட்டத்தில் கூறிய துணை முதல்வர் ஓபிஎஸ் கருத்துக்கு,
’முதல்வர் பதவி இனி வாழ்நாளில் கிடைக்காது என நினைத்து விரக்தியில் மனநலம் பாதித்தவர் போல் பேசுகிறார் ஓபிஎஸ்’ என்று பதிலளித்தார் தினகரன்.
அவர் மேலும், ’மேடை கிடைத்துவிட்டது என்பதற்காக உண்மைக்கு புறம்பாக ஓபிஎஸ் பேசுகிறார். மன்னார்குடியில் நடைபெற்ற கூட்டம் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் நடத்திய கூட்டம். ஓபிஎஸ் கருத்தை அவரது மனைவி கூட நம்பமாட்டார்’என்று தெரிவித்தார்.