Skip to main content

இருட்டறைக்குள் சிதைக்கப்படுகிறதா மக்கள் அதிகாரம்? புதிர் நிரம்பிய ஜனநாயகம்..!

Published on 08/05/2019 | Edited on 08/05/2019

 

என்னமோ நடக்குது உலகத்துல... மர்மமா இருக்குது... ஒன்னுமே புரியலே....,இந்த பாடல் இப்போது இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கச்சிதமாக பொறுந்திப் போகிறது என்கிறது இந்திய அரசியல் வட்டாரம். 

 

பீகாரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் டெம்போவில் பயணம் செய்கிறது ... உ.பி.யில் ஓட்டல் கடையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பதுக்கப்படுகிறது. சதீஸ்கரில் எந்த பட்டனை அழுத்தினாலும் ஓட்டு தாமரைக்கு தான் விழுகிறது. குஜராத்தில் வாக்களிக்க வந்தவர்களை வாக்கு மிஷின் அருகே நிறுத்திவிட்டு ஒரே நபர் தொடர்ந்து பட்டனை அழுத்திக் கொண்டுள்ளார்...


இந்த மாயாஜால விளையாட்டின் கதாபாத்திரம் தமிழ்நாட்டிலும் முகம் காட்டுகிறது. மதுரை தொகுதி வாக்குப் பதிவான மின்னனு இயந்திரங்கள் உள்ள அறைக்குள் சென்று இரண்டு மணி நேரம் இருந்து வந்தார் ஒரு தாசில்தார்.  இந்த பரபரப்பு அடங்கும் முன்னரே தேனி தொகுதிக்குட்பட்ட வட்டாச்சியர் அலுவலகத்திற்கு எந்த முன்னறிவிப்பும் இன்றி 50 மின்னனு வாக்கு இயந்திரங்கள் வந்து இறங்குகிறது. அரசியல் கட்சியினர் அவர்களாகவே எப்படியோ தகவல் தெரிந்து கேட்டால் அது சில பூத்களில் மறுவாக்குப்பதிவுக்காக என்று பதில் கூறுகிறார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி.

 

v

 
ஒவ்வொரு தொகுதிகளிலும் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீலிடப்பட்டு அந்தந்த ஊரில் உள்ள கல்லூரி அல்லது அரசு கட்டிடங்களில் பாதுகாப்பாக அதுவும் மூன்றடுக்கு பாதுகாப்பாக உள்ளது என தேர்தல் ஆணையம் கூறி வருகிறது. இந்த தேர்தலில் தமிழகத்தில் எந்த தொகுதியிலும் வன்முறை வெடிக்கவில்லை. ஓட்டுமிஷின் உடைக்கப்படவில்லை. எதிர்கட்சியோ அல்லது ஆளுங்கட்சியோ இந்த பூத்தில் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை யாரும் வைக்கவில்லை. 

 

பிறகு ஏன் தேனிக்கு சில பூத்களில் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும்? தேர்தல் ஆணையமே மறு வாக்குப்பதிவுக்கு தாமாக முடிவு செய்வது எதனால்? இதற்கு தான் இப்படியொரு பதிலை கூறுகிறது தேர்தல் ஆணையம்.  ஒவ்வொரு தொகுதியிலும் மாதிரி வாக்குப்பதிவு அந்த வாக்கு இயந்திரத்தில் நடந்தது அதை பல இடங்களில் அதிகாரிகள் டெலிட் செய்யாமல் விட்டு விட்டார்கள் என்பது தான். இதற்காக தான் தேனிக்கு மட்டுமல்ல ஈரோட்டுக்கும் இயந்திரங்கள் அனுப்பப்பட்டிருக்கிறது என கூறியுள்ளது. இதற்காக ஈரோட்டிற்கு 20 விவிபேட் இயந்திரங்கள் வந்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

 

சத்தமில்லாமல் வந்து இறங்கியிருக்கிறது...., முதலில் வாக்குப்பதிவு எந்திரங்கள் தான் வந்திருக்கின்றன என தகவல் வெளியான நிலையில், விவிபேட் தான் வந்திருக்கிறது என அதிகாரிகள் தரப்பில் உறுதிப்படுத்தினர்.

 

ஈரோட்டில் எந்தெந்த வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது என்றும், என்ன காரணத்திற்காக விவிபேட் எந்திரங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன என ஈரோடு கலெக்டர் கதிரவனிடம் விசாரிக்கையில், ‘காங்கேயம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, திருமங்கலம் ஊராட்சி ஒன்றியப் பள்ளி பூத் நெம்பர் 248 ல்  நடந்த வாக்குப்பதிவில் ஒருசில தவறுகள் நடந்திருக்கிறது. அங்கு பதிவான 50 மாதிரி வாக்குகளை அழிக்காமல், தொடர்ந்து வாக்குப்பதிவு செய்திருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் மாதிரி வாக்குப்பதிவோடு சேர்ந்து மொத்தம் நடைபெற்ற வாக்குப்பதிவில் ஒன்பது வாக்குகள் குறைந்திருக்கிறது. இதனால் கடும் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் அந்த ஒரு வாக்குச்சாவடிக்கு மட்டும் வாக்குப்பதிவு செய்வதற்காக விவிபேட் இயந்திரங்களைக் கோவையில் இருந்து வாங்கி வைத்திருக்கிறோம்” எனக் கூறினார். 

 

அங்கு பதிவான வாக்குகள் மொத்தம் 736 மாதிரி வாக்குகள் 50 ஆக மொத்தம் அந்த இயந்திரத்தில் 786 வாக்குகள் இருக்க வேண்டும். ஆனால் அதில் 777 தான் பதிவில் உள்ளது.  9 வாக்குகள் குறைவாக காட்டியது என்கிறார்கள். 


கையால் எழுதும் கணக்கில் கூட்டல், கழித்தலில் மனித தவறு நடப்பது இயல்பானது. தேர்தல் ஆணையம் திரும்ப திரும்ப கூறுவது போல நூறு சதவீதம் நம்பக தன்மை வாய்ந்தது என்று எல்லோரும் நம்புவோம்.  இந்த 248 வது பூத்தில் 9 ஓட்டு எங்கே போனது என்கிற ரகசியம் யாருக்கும் தெரியவில்லை. அதனால் மறுதேர்தலாம்.  இதையும் ஜனநாயகத்தின் எஜமானர்களான வாக்காளர்கள் நம்புவோம்.


வாக்கு பெட்டிக்குள் இருப்பது "மக்கள் அதிகாரம்..." ஆனால் அதை 23 ந் தேதி வரை இருட்டறைக்குள் வைத்து  கையாள்வது அதிகார வர்க்கம் என்கிற மக்கள் தொடர்பற்ற "அதிகார பீடம்" தான்.  இது சிதைக்கப்படுகிறதா? சீர்படுத்தப்படுகிறதா? புதிர் நிரம்பியதாக உள்ளது...வாழ்க ஜனநாயகம்...!

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அப்பாவி மக்களை இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது'- ராமதாஸ் கருத்து

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜூன் 6ஆம் தேதி வரை தொடரும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு மற்றும் புதுவையில் மக்களவைத் தேர்தல்கள் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6 ஆம் நாள் வரை தொடரும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லாத நிலையில், அதை தொடர்வது மக்களுக்கு பாதிப்புகளையே ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகத் தான் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், இனி நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லை. இந்தியாவின் பிற மாநிலங்களில் இன்னும் தேர்தல்கள் நடத்தப்படவில்லை என்பதற்காக தமிழ்நாட்டில் நடத்தை விதிகளை இன்னும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. ஒருவேளை ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டிருந்தாலோ அல்லது தமிழ்நாட்டில் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடத்தப்பட்டிருந்தாலோ வாக்குப்பதிவு முடிந்த சில நாட்களில் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும். அத்துடன் தேர்தல் நடத்தை விதிகளும் முடிவுக்கு வந்திருக்கும். தமிழ்நாட்டில் முதல் கட்ட வாக்குப்பதிவு  நடத்தப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக மற்ற மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முடிவடையும் வரை தமிழக அரசும், மக்களும் தேவையற்ற கட்டுப்பாடுகளை சுமந்து கொண்டு வாட வேண்டிய தேவையில்லை.

 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிக்கை கடந்த மார்ச் 16 ஆம் நாள் வெளியிடப்பட்டது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு ஜூன் 6ஆம் நாள் தான் தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் என்பதால், அதுவரை நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும். அதாவது தேர்தல் நடைமுறை என்ற பெயரில் தமிழ்நாடு அரசு நிர்வாகத்தை 83 நாட்களுக்கு முடக்கி வைப்பதையும், அதே காலத்திற்கு அப்பாவி மக்களை பல்வேறு வகைகளில் இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது.

நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் போது ஆட்சியாளர்கள் புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது. மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து அதிகாரிகளுக்கு எந்த வித ஆணைகளையும் பிறப்பிக்க முடியாது; அதிகாரிகளுடன் முதலமைச்சரோ, அமைச்சர்களோ ஆய்வுக்கூட்டங்களைக் கூட நடத்த இயலாது. கடைநிலை பணியாளர்கள் முதல் தலைமைச் செயலர் வரை அனைத்து நிலை அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருப்பார்கள். மொத்தத்தில் அரசு நிர்வாகம் என்பது செயல்பட முடியாத அளவுக்கு மொத்தமாக முடக்கப்பட்டிருக்கும். அதனால், மக்களுக்கான நலத்திட்ட உதவிகளைக் கூட அரசால் செய்ய முடியாத நிலை உருவாகும்.

தேர்தல் நடத்தை விதிகளால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது வணிகர்கள் தான். சில்லறை வணிகம் செய்யும் வணிகர்கள் அதில் கிடைத்தப் பணத்தை சந்தைக்கு கொண்டு சென்று தான் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வர வேண்டும். அவ்வாறு வணிகர்கள் பணத்தைக் கொண்டு செல்லும் போது, அவர்களை மடக்கி சோதனை நடத்தும் பறக்கும் படையினர் வணிகர்களிடம்  ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ஒரு ரூபாய் கூடுதலாக இருந்தாலும் கூட மொத்தப் பணத்தையும் பறிமுதல் செய்கின்றனர். அதனால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வணிகர்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானார்கள். அவர்களை மேலும் 45 நாட்களுக்கு பாதிப்புகளுக்கு உள்ளாக்குவது நியாயமற்றதாகும்.

எனவே, தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்து விட்ட நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளை உடனடியாக தளர்த்த வேண்டும். மக்களுக்குத் தேவையான நலத் திட்டங்களை செயல்படுத்த  தமிழக அரசையும், வணிகத்திற்கு தேவையான பணத்தை தடையின்றி எடுத்துச் செல்ல வணிகர்களையும் தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.

Next Story

தேர்தலுக்கு பின் சென்னை திரும்பும் மக்கள்; திணறும் பரனூர்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
People returning to Chennai after elections; The stifling Paranur toll plaza

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஏற்கனவே சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு இலட்சக்கணக்கானோர் வாக்களிப்பதற்காக சென்றிருந்தனர். இதன் காரணமாக ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டிருந்தது. தொடர்ந்து வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் கூட்டநெரிசல் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் தற்போது மூன்று நாள் விடுமுறை முடிந்து சென்னைக்கு அதிகப்படியான மக்கள் திரும்புவதால் பல்வேறு இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை அடுத்துள்ள பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.