Skip to main content

வாக்குகளை அள்ளிய அமைச்சர்கள்; முதல்வர் பாராட்டு

Published on 06/03/2023 | Edited on 06/03/2023

 

erode east by election vote collect by minister 

 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அதிமுக சார்பில் தென்னரசு உள்பட 73 பேர் போட்டியிட்டனர். இதில் இளங்கோவன் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 192 ஓட்டுகளும் அதிமுக வேட்பாளர் தென்னரசு 43 ஆயிரத்து 923 ஓட்டுகளும் வாங்கியதன் மூலம் 66 ஆயிரத்து 21 ஓட்டுகள் கூடுதலாகப் பெற்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார். இதில் நாம் தமிழர், தேமுதிக உள்பட 71 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

 

இந்த அளவுக்கு திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு இமாலய வெற்றியை வாங்கிக் கொடுத்ததே முதல்வர் ஸ்டாலின் தான். அந்த அளவுக்கு தனது அமைச்சரவையில் உள்ள கே.என்.நேரு, சக்கரபாணி, செந்தில் பாலாஜி, எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன், சாமிநாதன் ஆகிய எட்டு அமைச்சர்கள் தலைமையில் குழு பிரித்து முதல்வர் ஸ்டாலின் தேர்தல் களத்தில் இறக்கினார். இவர்களோடு மற்ற அமைச்சர்கள் மற்றும் அந்தந்தப் பகுதிகளில் உள்ள மாவட்டச் செயலாளர்கள் உட்பட பொறுப்பில் இருக்கும் கட்சியினரும் தேர்தல் களத்தில் பணியாற்றினார்கள். அதன் அடிப்படையில் அமைச்சர்கள் தலைமையிலான கட்சியினரும் வார்டு வாரியாக களமிறங்கி வாக்காளர்களைச் சந்தித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை வெற்றிபெற வைத்திருக்கிறார்கள். இதில் அமைச்சர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் போட்டிப் போட்டுக் கொண்டு அதிக வாக்குகளையும் பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

 

erode east by election vote collect by minister 

 

இதில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகிய நான்கு அமைச்சர்கள் தலைமையில் மாவட்டச் செயலாளர்களான ஐ.பி.செந்தில்குமார், இளைய அருணா, ராஜேஷ்குமார், மதுரா செந்தில் ஆகியோர் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள கருங்கல்பாளையம், வீரப்பன்சத்திரம் ஆகிய பகுதிகளில் ஒதுக்கப்பட்ட 26, 38 மற்றும் 39 ஆகிய மூன்று வார்டுகளில் உள்ள 23 வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கக் கூடிய வாக்காளர்களைச் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் செய்த திட்டங்களையும் சலுகைகளையும் வாக்காளர்களிடம் எடுத்துக் கூறியதுடன் மட்டுமல்லாமல், சாதனை விளக்க நோட்டீஸ்களையும் வீடுதோறும் கொடுத்து கை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார்கள்.

 

erode east by election vote collect by minister 

 

இதில் அமைச்சர் சக்கரபாணி ஒரு படி மேலே போய் வாக்காள மக்களை தினசரி வீடுகளில் சந்தித்து, அவர்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் நிறைவேற்றிக் கொடுத்தது மட்டுமல்லாமல் கூடிய விரைவில் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் தலைவர் வழங்க இருக்கிறார்கள் என்றும், ஏற்கனவே கொரோனா காலத்தில் 4000 ரூபாய் கொடுத்தோம். அதுபோல் பொங்கலுக்கு பணத்துடன் தொகுப்பு பொருட்களும் வழங்கியிருக்கிறோம். அந்த அளவுக்கு மக்களின் ஆட்சியாகவே முதல்வர் நடத்தி வருகிறார். அதனால் கூட்டணி கட்சி வேட்பாளர் இளங்கோவனை வெற்றி பெறவைப்பதன் மூலம்  அனைத்து அடிப்படை வசதிகளையும் தலைவர் மூலம் இத்தொகுதிக்கு கொண்டு வர முடியும் என்றும் கூறி இரவு பகல் பாராமல் வாக்காள மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டியதில் 23 வாக்குச்சாவடிகளில் பதிவான 16143 ஓட்டுகளில் 11101 ஓட்டுகள் கை சின்னத்திற்கும் 3318 ஓட்டுகள் இரட்டை இலைக்கும் கிடைத்தது போக மற்ற வேட்பாளர்களுக்கு 1724 ஓட்டுகள் கிடைத்தன.

 

இதில் அதிமுக வேட்பாளரை விட 7793 ஓட்டுகள் கூடுதலாக அமைச்சர்கள் பெற்றுக் கொடுத்து இருக்கிறார்கள். அதுபோல் 68.86 சதவீதம் வாக்குகள் வாங்கியதின் மூலம் மற்ற அமைச்சர்கள் குழுவை விட இந்த அமைச்சர்கள் குழு அதிக ஓட்டுகள் வாங்கிக் கொடுத்து முதலிடம் பிடித்த பெருமையை தக்கவைத்து முதல்வரிடமும் பாராட்டைப் பெற்று இருக்கிறது. அதேபோல் அமைச்சர்களான கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோருக்கு சூரியம்பாளையம், வீரப்பன்சத்திரம் பகுதியிலுள்ள 33 வாக்குச்சாவடிகள் ஒதுக்கப்பட்டதில் 68.65 சதவீதம் வாக்குகள் பெற்றுக் கொடுத்து இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறார்கள். இப்படி மற்ற அமைச்சர்கள் குழுவும் இதற்கு அடுத்தபடியான இடங்களை பிடித்து  இருக்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
India alliance will take action to increase reservation CM MK Stalin

டெல்லியில் சம்ருதா பாரத் அறக்கட்டளை சார்பில் நடைபெற்று வரும் சமாஜிக் நியாயக் சம்மேளன மாநாட்டிற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார். அதில், “இந்தியாவிற்குள் சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு முக்கிய பங்கினை ஆற்றி வருகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு, இட ஒதுக்கீடு முறைக்கு அச்சுறுத்தல் வரும்போதெல்லாம் திராவிட இயக்கம் உறுதியான எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி உள்ளிட்டோருக்கு 69% இடஒதுக்கீடு வழங்கி, தன்னிச்சையான 50% இடஒதுக்கீடு வரம்பை விட கூடுதலாக இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு முழு நிதியுதவியுடன், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான தொழில்முறை படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு அண்மையில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பட்டியலினத்தவருக்கும் இட ஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் திமுகவின் பல கொள்கைகள் எதிரொலிப்பது என் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஓபிசி மற்றும் எஸ்சி மற்றும் எஸ்டியினரை மேம்படுத்துவதற்கான உறுதிமொழிகளை நமது வரவிருக்கும் அரசாங்கம் ஆர்வத்துடன் நிறைவேற்றும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரம் அளிப்பது என்பது நீதிக்கட்சி காலத்திலிருந்தே இருக்கும் தமிழ்நாட்டின் மரபு ஆகும். சம்ருத்த பாரத் அறக்கட்டளையின் மாநாட்டில் சமூக நீதி பற்றிய எனது செய்தியை எங்கள் கட்சியின் எம்.பி.யான வில்சன் மூலம் பகிர்ந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் உள்ளடக்கிய இந்தியாவை நோக்கி நமது பயணத்தைத் தொடர்வோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“கையில் புத்தகங்கள் தவழட்டும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Let the books creep in the hand says Chief Minister MK Stalin

மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக ஐக்கிய நாடுகளின் சபையான யுனெஸ்கோ சார்பில் உலக புத்தக தினம் ஒவ்வொரு ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உலக புத்தக தின வாழ்த்துச் செய்தியை தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “புதிய உலகத்திற்கான திறவுகோல், அறிவின் ஊற்று, கல்விக்கான அடித்தளம், சிந்தனைக்கான தூண்டுகோல், மாற்றத்திற்கான கருவி, மக்களை உணர வழிகாட்டி எனப் புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை. அதனால் புத்தகங்களை வாசியுங்கள், நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள். புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வதை ஓர் இயக்கம் என நான் தொடங்கியது முதல் பெறப்பட்ட இரண்டரை லட்சம் புத்தகங்களுக்கு மேல், பல மாணவர்களுக்கும், நூலகங்களுக்கும் கொடையளித்துள்ளேன். கையில் புத்தகங்கள் தவழட்டும்! சிந்தனைகள் பெருகட்டும்! நல்வழி பிறக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2017 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவராக பொறுப்பேற்றதிலிருந்தும் 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகும் தன்னைச் சந்திக்க வருபவர்கள், பூங்கொத்துகள், பொன்னாடைகளைத் தவிர்த்து அன்பின் பரிமாற்றத்திற்கு அடையாளமாக புத்தகங்களை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி தன்னைச் சந்திக்க வந்த பலரும் வழங்கிய ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு நூலகங்களுக்கும், புத்தகங்கள் கோரிக் கடிதம் அளித்தவர்களுக்கும், அமைப்புகளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.