Skip to main content

வாக்குகளை அள்ளிய அமைச்சர்கள்; முதல்வர் பாராட்டு

Published on 06/03/2023 | Edited on 06/03/2023

 

erode east by election vote collect by minister 

 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அதிமுக சார்பில் தென்னரசு உள்பட 73 பேர் போட்டியிட்டனர். இதில் இளங்கோவன் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 192 ஓட்டுகளும் அதிமுக வேட்பாளர் தென்னரசு 43 ஆயிரத்து 923 ஓட்டுகளும் வாங்கியதன் மூலம் 66 ஆயிரத்து 21 ஓட்டுகள் கூடுதலாகப் பெற்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார். இதில் நாம் தமிழர், தேமுதிக உள்பட 71 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

 

இந்த அளவுக்கு திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு இமாலய வெற்றியை வாங்கிக் கொடுத்ததே முதல்வர் ஸ்டாலின் தான். அந்த அளவுக்கு தனது அமைச்சரவையில் உள்ள கே.என்.நேரு, சக்கரபாணி, செந்தில் பாலாஜி, எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன், சாமிநாதன் ஆகிய எட்டு அமைச்சர்கள் தலைமையில் குழு பிரித்து முதல்வர் ஸ்டாலின் தேர்தல் களத்தில் இறக்கினார். இவர்களோடு மற்ற அமைச்சர்கள் மற்றும் அந்தந்தப் பகுதிகளில் உள்ள மாவட்டச் செயலாளர்கள் உட்பட பொறுப்பில் இருக்கும் கட்சியினரும் தேர்தல் களத்தில் பணியாற்றினார்கள். அதன் அடிப்படையில் அமைச்சர்கள் தலைமையிலான கட்சியினரும் வார்டு வாரியாக களமிறங்கி வாக்காளர்களைச் சந்தித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை வெற்றிபெற வைத்திருக்கிறார்கள். இதில் அமைச்சர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் போட்டிப் போட்டுக் கொண்டு அதிக வாக்குகளையும் பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

 

erode east by election vote collect by minister 

 

இதில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகிய நான்கு அமைச்சர்கள் தலைமையில் மாவட்டச் செயலாளர்களான ஐ.பி.செந்தில்குமார், இளைய அருணா, ராஜேஷ்குமார், மதுரா செந்தில் ஆகியோர் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள கருங்கல்பாளையம், வீரப்பன்சத்திரம் ஆகிய பகுதிகளில் ஒதுக்கப்பட்ட 26, 38 மற்றும் 39 ஆகிய மூன்று வார்டுகளில் உள்ள 23 வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கக் கூடிய வாக்காளர்களைச் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் செய்த திட்டங்களையும் சலுகைகளையும் வாக்காளர்களிடம் எடுத்துக் கூறியதுடன் மட்டுமல்லாமல், சாதனை விளக்க நோட்டீஸ்களையும் வீடுதோறும் கொடுத்து கை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார்கள்.

 

erode east by election vote collect by minister 

 

இதில் அமைச்சர் சக்கரபாணி ஒரு படி மேலே போய் வாக்காள மக்களை தினசரி வீடுகளில் சந்தித்து, அவர்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் நிறைவேற்றிக் கொடுத்தது மட்டுமல்லாமல் கூடிய விரைவில் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் தலைவர் வழங்க இருக்கிறார்கள் என்றும், ஏற்கனவே கொரோனா காலத்தில் 4000 ரூபாய் கொடுத்தோம். அதுபோல் பொங்கலுக்கு பணத்துடன் தொகுப்பு பொருட்களும் வழங்கியிருக்கிறோம். அந்த அளவுக்கு மக்களின் ஆட்சியாகவே முதல்வர் நடத்தி வருகிறார். அதனால் கூட்டணி கட்சி வேட்பாளர் இளங்கோவனை வெற்றி பெறவைப்பதன் மூலம்  அனைத்து அடிப்படை வசதிகளையும் தலைவர் மூலம் இத்தொகுதிக்கு கொண்டு வர முடியும் என்றும் கூறி இரவு பகல் பாராமல் வாக்காள மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டியதில் 23 வாக்குச்சாவடிகளில் பதிவான 16143 ஓட்டுகளில் 11101 ஓட்டுகள் கை சின்னத்திற்கும் 3318 ஓட்டுகள் இரட்டை இலைக்கும் கிடைத்தது போக மற்ற வேட்பாளர்களுக்கு 1724 ஓட்டுகள் கிடைத்தன.

 

இதில் அதிமுக வேட்பாளரை விட 7793 ஓட்டுகள் கூடுதலாக அமைச்சர்கள் பெற்றுக் கொடுத்து இருக்கிறார்கள். அதுபோல் 68.86 சதவீதம் வாக்குகள் வாங்கியதின் மூலம் மற்ற அமைச்சர்கள் குழுவை விட இந்த அமைச்சர்கள் குழு அதிக ஓட்டுகள் வாங்கிக் கொடுத்து முதலிடம் பிடித்த பெருமையை தக்கவைத்து முதல்வரிடமும் பாராட்டைப் பெற்று இருக்கிறது. அதேபோல் அமைச்சர்களான கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோருக்கு சூரியம்பாளையம், வீரப்பன்சத்திரம் பகுதியிலுள்ள 33 வாக்குச்சாவடிகள் ஒதுக்கப்பட்டதில் 68.65 சதவீதம் வாக்குகள் பெற்றுக் கொடுத்து இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறார்கள். இப்படி மற்ற அமைச்சர்கள் குழுவும் இதற்கு அடுத்தபடியான இடங்களை பிடித்து  இருக்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.