Skip to main content

பூத் கமிட்டியினர்களுக்கு ஐடியா கொடுத்த இ.பி.எஸ்.

Published on 28/01/2023 | Edited on 28/01/2023

 

Erode byelection campaign eps gave idea to admk

 

பிப். 27 ஆம் தேதி காலை ஈரோட்டுக்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவின் மாநில அளவிலான நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார். இதில் அவர், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமைக்கப்பட்ட பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு ஆலோசனையும் அறிவுரையும் வழங்கினார். 

 

மேலும் இந்தக் கூட்டத்தில் பேசிய அவர், “ஈரோடு கிழக்கில் தான் நமது கட்சியின் ஓட்டு ஒட்டுமொத்த நிர்வாகிகளின் மானம் இருக்கும். இந்த ஆட்சி எப்போது போகும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதை திமுகவினரே சொல்கின்றனர். மூன்றில் ஒரு பகுதி ஆட்சி முடிந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக ஒரு துரும்பளவிற்கு கூட பணி செய்யவில்லை. அதிமுக ஆட்சியில் தான் நிறைய திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். நாம் நெஞ்சை நிமிர்த்தி வாக்கு கேட்கலாம். திமுக கூனி, குறுகி ஓட்டு கேட்க வேண்டும்.

 

ஈரோடு தொகுதியில்  மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள் அதிகம். வீட்டுவரி, சொத்துவரி, குடிநீர் கட்டணம், மின்கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியுள்ளனர். மாதம் 1000 இல்லத்தரசிகளுக்கு வழங்குவதாக கூறினர். இப்போது, தகுதியானவர்களுக்கு கொடுப்பதாகக் கூறி  ஏழை மக்களை ஏமாற்றுகின்றனர்.  எப்போது கணக்கெடுத்து, எப்போது கொடுப்பார்கள். எந்த முக்கியமான திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. முதியோர் உதவித்தொகையை உயர்த்துவதாக கூறியவர்கள், நாம் கொடுத்து வந்ததை நிறுத்திவிட்டனர். கல்விக்கடன் ரத்து செய்யப்படவில்லை. 52 லட்சம் மாணவர்களுக்கு அதிமுக ஆட்சியில் லேப்டாப் வழங்கப்பட்டது. அந்த திட்டத்தை நிறுத்தி விட்டனர். திருமண நிதி உதவி, இருசக்கர வாகன திட்டத்தையும் நிறுத்தி விட்டனர்.


ஈரோடு மாநகரில் ரூ. 100 கோடிக்கு மேல் அரசு மருத்துவமனை தரம் உயர்த்துதல், ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டது, திண்டல் உயர்மட்ட பாலத்திற்கு ரூ. 300 கோடி ஒதுக்கினோம், அரசு மருத்துவமனை பாலம், ஊராட்சிக் கோட்டை குடிநீர் திட்டம் கொண்டுவந்தோம். அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் என்பதால் அதனைக்கூட கிடப்பில் போட்டுவிட்டனர். அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் மருத்துவ படிப்பு படிக்க 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கினோம். இதன் மூலம் 564 பேர் மருத்துவம் படிக்கின்றனர். அரசே கல்விக் கட்டணத்தை ஏற்றது.


திமுக ஆட்சி வந்தபின் ஒரு துரும்பை கூட செய்யவில்லை. விசைத்தறி தொழிலாளர்கள் வேலையிழந்து வெளியூர் சென்று விட்டனர். விலையில்லா வேட்டி, சேலை உற்பத்தி பணியை அவர்களுக்கு முறையாக கொடுக்கவில்லை. விசைத்தறி தொழில் நலிந்து விட்டது. இதைப்பற்றி கவலைப்படாமல், கமிஷன், கலெக்சன் ஆட்சி தான் நடக்கிறது.


பொங்கலுக்கு ரூ 2500 கொடுத்தோம். இவர்கள் 21 பொங்கல் பொருள் கொடுப்பதாக கூறினர்.  யாராலும் பயன்படுத்த முடியாத அளவுக்கு தரமற்ற பொருட்களை வெளிமாநிலங்களில் இருந்து வாங்கிக் கொடுத்தார்கள். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பொங்கலுக்கு ரூ. 5000 கொடுக்க வேண்டும் என்று சொன்ன ஸ்டாலின், ரூ. 1000 தான் கொடுத்தார். விவசாயிகள் போராட்டத்திற்கு பிறகுதான் கரும்பு கொடுத்தார்கள். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை நிறுத்தப்பட்டதுதான் திராவிட மாடல் ஆட்சி என மக்களிடம் புரிய வைக்க வேண்டும்.


நீங்களே தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவது போல் எண்ணி, தேர்தல் பணி ஆற்ற வேண்டும். இதுவரை நடைபெற்ற இடைத்தேர்தல்களில் ஈரோடு இடைத்தேர்தல் தான் மிகப்பெரிய வெற்றி சரித்திரம் படைக்க வேண்டும். மக்கள் பாராட்டும் அளவுக்கு பணியாற்ற வேண்டும். அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்ற பெருமையை காக்க வேண்டும்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.