Skip to main content

பாதிப்பு இல்லாத பகுதிகளில் ஊரடங்கை தளர்த்தி தொழிற்சாலைகளை இயங்க அனுமதிக்க வேண்டும்... ஈஸ்வரன்

Published on 30/04/2020 | Edited on 30/04/2020

 

கரோனா பாதிப்புள்ள முழு மாவட்டத்தையும் சிவப்பு மண்டலமாக கருதாமல் பாதிக்கப்பட்ட பகுதிகளை மட்டும் சிவப்பு மண்டலமாக கருதி பாதுகாப்பு அளிக்க வேண்டும். சிவப்பு மண்டல மாவட்டங்களிலும் பாதிக்காத பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகளை கட்டுப்பாடுகளோடு மேற்கொள்ள வேண்டும். பாதிப்பு இல்லாத பகுதிகளில் ஊரடங்கை தளர்த்தி தொழிற்சாலைகளை இயங்க அனுமதிக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இந்திய அரசினுடைய கவனம் நோய் பாதுகாப்போடு சேர்த்து பொருளாதார சீரழிவு பக்கமும் திரும்பியிருக்கிறது. 40 நாட்களாக ஊரடங்கு உத்தரவினால் மத்திய மாநில அரசுகளின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு வீட்டிலேயே அடங்கிக் கிடக்கும் மக்களுடைய வாழ்வாதாரம் கவலைக்குரியதாக மாறி இருக்கிறது. 
 

மத்திய மாநில அரசுகளும் இதை உணர்ந்து ஊரடங்கை தளர்த்துவதற்கான முயற்சிகளில் கவனத்தை திருப்பி இருக்கிறது. கரோனா வைரஸ் பாதிப்புக்கான மருந்துகளை உலகம் தயாரிக்கின்ற வரை நிரந்தர தீர்வு கிடையாது. இதை எதிர்த்து போரிடுவதை தவிர வேறு வழி இல்லை. 

 

ஊரடங்கை  பயன்படுத்தி மாநில அரசுகள் தேவையான தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனைகளை உருவாக்கியிருக்கிறார்கள். தேவையான வென்டிலேட்டர் கருவிகளையும் தயார்படுத்தி இருக்கிறார்கள். தேவையான அளவு கரோனா பரிசோதனை நடைபெறவில்லை என்றாலும் பரிசோதனை எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டிருப்பது உண்மை. இந்த சூழ்நிலையில் ஊரடங்கை தளர்த்தி கரோனா கிருமிகளை எதிர் கொண்டு எதிர்ப்பு சக்திகளை உடம்பில் உருவாக்குவது தான் தீர்வாக இருக்கும்.

 

E.R.Eswaran



தமிழகத்தில் பொருளாதார நடவடிக்கைகளுக்கு அனுமதியை கொடுத்து ஏழை மக்களின் வருமானத்திற்கு வழி செய்யக்கூடிய முயற்சிகள் வேகப்படுத்தப்பட வேண்டும். மத்திய அரசு அறிவித்தது போல 22 மாவட்டங்களை முழுமையாக சிவப்பு மண்டலத்தில் வைத்துவிட்டு எந்த பொருளாதார நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது. 
 

தொழிற்சாலையோ, வியாபாரமோ குறிப்பிட்ட மாவட்டத்திற்குள் மட்டும் துவக்கி நடத்த முடியாது. பக்கத்து மாவட்டத்தினுடைய தேவை ஒவ்வொரு நடவடிக்கைக்கும் இருக்கிறது. ஒரு மாவட்டத்தின் தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் வேறு மாவட்டங்களில் இருந்து வருவார்கள். அதேபோல ஒரு பெரிய தொழிற்சாலைக்கு மூலப்பொருட்கள் கொடுக்கின்ற தொழிற்சாலைகள் வேறு மாவட்டத்தில் இருப்பார்கள். 
 

சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் போன்ற அனைத்து மாவட்டங்களையும் முழுமையாக மூடிவிட்டு தமிழகத்தின் பொருளாதார நடவடிக்கைகள் மேற்கொள்ள வாய்ப்பு இல்லை. ஒரு சில இடங்களில் கரோனா பாதிப்பு இருக்கிறது என்பதற்காக முழு மாவட்டத்தையும் சிவப்பு மண்டலம் என்று கருதுவது தவிர்க்கப்படலாம். ஒரு மாவட்டத்தில் எங்கெங்கு பாதிப்பு இருக்கிறதோ அந்தப் பகுதிகளை மட்டும் தவிர்த்து மீதி இருக்கும் பகுதிகளுக்கு ஊரடங்கை தளர்த்த வேண்டும். 
 

ஹரியானா போன்ற பல மாநிலங்களில் இந்த வகையில் நடைமுறைப்படுத்தி  இருக்கிறார்கள். இதுதான் சாத்தியம். சிவப்பு மண்டலமாக இருந்தாலும் பாதிப்பு இல்லாத பகுதிகளில் ஊரடங்கை தளர்த்தி தொழிற்சாலைகளை கட்டுப்பாடுகளோடு இயங்க அனுமதிக்க வேண்டும். பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் பரிசோதனை தாமதமில்லாமல் முழுமையாக செய்யப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் பரிசோதனையும் செய்யாமல் மக்கள் வீடுகளில் தொடர்ந்து முடக்கப்படுவதால் அமைதி இழக்கிறார்கள். எல்லாவற்றையும் பரிசீலித்து பாதுகாப்பான பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; உயரும் பலி எண்ணிக்கை!

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
Increasing Corona Virus; Rising toll

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகையான கொரோனாவான ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. 

இந்த நிலையில், நேற்று (31-12-23) வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.