ADVERTISEMENT
அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி அதற்கான சான்றிதழில் கையொப்பமிட்ட பின்னர் அங்கு இருந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதற்கு முன்னதாக அதிமுகவின் தலைமை அலுவலகம் முன்பு முன்னாள் அமைச்சர் வளர்மதி தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை தொண்டர்களுடன் பகிர்ந்து கொண்டார். மேலும் தலைமை அலுவலகத்தில் குவிந்திருந்த தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments