Skip to main content

ஓபிஎஸ் மகனுக்கு எதிராக தனது மகனை களமிறக்கிய எடப்பாடி! கடுப்பில் அதிமுக அமைச்சர்கள்! 

Published on 29/08/2019 | Edited on 29/08/2019

ஆளும் கட்சியான அ.தி.மு.க.வில் வாரிசு அரசியல் தொடர்பான சர்ச்சைகள் தீவிரமாக கிளம்பியிருக்கு. ஜெயக்குமார் மகன், ஓ.பி.எஸ். மகன், ராஜன் செல்லப்பா மகன்னு அங்கேயும் வாரிசு அரசியல் சகஜமா இருக்குனு அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றனர். அதனால் எடப்பாடி, இப்ப தன் வாரிசான மிதுனுக்கு கட்சி நிகழ்ச்சிகளிலும் பொது நிகழ்ச்சிகளிலும் அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிச்சிருக்கார். இதுக்குக் காரணம், ஓ.பி.எஸ். நடத்திவரும் வாரிசு அரசியலுக்குப் பதில் கொடுக்கத்தான் எடப்பாடியும் இப்படி வரிஞ்சி கட்டியிருக்காராம். தன் மகன் ரவீந்திரநாத்தைக் கொஞ்சம் கொஞ்சமா அரசியல்ல இறக்கிவிட்ட ஓ.பி.எஸ்., இப்ப எம்.பி.யாகவும் ஆக்கி டெல்லிக்கு அனுப்பியிருக்கார். 
 

admk



அதோட தன் மகனை மத்திய மந்திரியாக்கும் முயற்சியிலும் மும்முரம் காட்டறார். இதையெல்லாம் பார்த்த எடப்பாடி குடும்பத்தினர், நீங்களும் உங்க மகனை அரசியல்ல களமிறக்குங்கன்னு எடப்பாடிக்கு நெருக்கடி கொடுத்திருக்காங்க. குறிப்பா எடப்பாடியின் மனைவி ராதா, நம்ம பையன் எந்த வகையில் ரவீந்திரநாத்துக்கு குறைச்சல்? நம்ம மிதுனை வெளிச்சத்துக்குக் கொண்டு வரணும்னு உங்களுக்குத் தோணலையா?ன்னு கேட்டிருக்கார். மிதுனும் அப்பாவுக்கு ரொம்ப உதவியா இருக் காராம். அதன் எதிரொலியாத்தான் இப்ப எடப் பாடி தன் மகன் மிதுனை அரசியல் நிகழ்ச்சி களுக்கும் பொதுநிகழ்ச்சிகளுக்கும் தன்னோடு அழைச்சிக்கிட்டுப் போக ஆரம்பிச்சிருக்கார்.

  admk



அண்மைக் காலமாக எடப்பாடியின் மகன் மிதுன்தான், அவருக்கான டீலிங்குகள் எல்லாவற்றையும் கவனிச்சிக்கிறாராம். இதையெல்லாம் பார்த்து எரிச்சலாகித்தான், எடப்பாடியின் பக்கபலமான அமைச்சர்களான தங்கமணியும் வேலுமணியும் அப்செட்டாகி சமீபகாலமாக அவரிடமிருந்து விலகி நிக்கிறாங்க. எடப்பாடியும் அவர்களிடம் பேசுவதைக் குறைச்சிக்கிட்டாராம். அந்த ரெண்டு அமைச்சர்களும் எடப்பாடியை ஓவர்டேக் செய்து, டெல்லியின் கடைக்கண் பார்வையை பெற்றிருக்கிறார்களாம். கட்சிக்குள் பவர் செக்டாரா மிதுன் வளர்வதை சீனியர் அமைச்சர்கள் யாரும் விரும்பலையாம். அந்தக் கோபத்தை அவங்க எடப்பாடிகிட்ட வெளிப்படையாவே காட்டறாங்கனு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.