Skip to main content

''கோட்டைவிட்டது யார்...? இபிஎஸ், ஓபிஎஸ் மன்னிப்புக் கேட்க வேண்டும்''-துரைமுருகன் கண்டனம்!

Published on 02/04/2022 | Edited on 02/04/2022

 

EPS, OPS should apologize '' - dhuraimurugan condemned!

 

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது செல்லாது; அதே நேரத்தில் இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்ற தீர்ப்பினை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் நிலையில், இந்த வழக்கில் திமுக தலைமையிலான அரசு முறையான தரவுகளை நீதிமன்றத்தில் அளிக்கவில்லை. இதனால்தான் இந்த வழக்கில் இப்படி தீர்ப்பு வந்துள்ளது என எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் கொண்டலாம்பட்டி செய்தியாளர்களைச் சந்திக்கையில் தெரிவித்திருந்தார்.

 

EPS, OPS should apologize '' - dhuraimurugan condemned!

 

மேலும் பேசிய அவர், ''எந்த அரசு வந்தாலும் ஒரே அதிகாரிதான். எங்களுக்கும் அதே அதிகாரிதான், அவர்களுக்கும் அதே அதிகாரிகள்தான். யாரும் மாறவில்லை. எனவே முறையாக மூத்த வழக்கறிஞர்கள் வைத்துதான் சட்டத்தைத் தயார் செய்து இடஒதுக்கீட்டை அறிவித்தோம். இந்த இடஒதுக்கீடு அடிப்படையில் முழுதரவுகளை தற்போதைய அரசு மதுரைக் கிளையில் தாக்கல் செய்யவில்லை. அதை வைத்துதான் உச்சநீதிமன்றம் இந்த வழக்கை விசாரிப்பார்கள். இவர்கள் கீழ் மட்டத்திலேயே தரவுகளைச் சரியாக கொடுக்கவில்லை. இதை நாம் சொல்லவில்லை நீதிபதிகளே சொல்லிவிட்டார்கள். சரியான தரவுகளை கொடுக்காததால்தான் இந்தநிலை ஏற்பட்டுவிட்டது'' என்றார்.

 

EPS, OPS should apologize '' - dhuraimurugan condemned!

 

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் இந்த கருத்துக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். ''வன்னியர் உள் ஒதுக்கீடு தொடர்பாக ஈபிஎஸ் கூறிய கருத்து கண்டனத்திற்குரியது. வன்னியருக்கான உள்ஒதுக்கீட்டை நிலைநிறுத்த அனைத்து வாதங்களையும் திமுக அரசு நீதிமன்றத்தில் முன்வைத்தது. வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு குறித்த தீர்ப்பு தொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் தமிழக அரசு கலந்து ஆலோசிக்கும். இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் வரை போகுமளவுக்கு அலட்சியமாக செயல்பட்ட இபிஎஸ்-ஓபிஎஸ் மன்னிப்பு கேட்க வேண்டும். சமூகநீதி பற்றி இபிஎஸ், சி.வி.சண்முகம் போன்றவர்கள் முதல்வருக்கு பாடம் எடுக்க வேண்டாம். பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் உரிய தரவுகளுடன் பரிந்துரையை பெறாமல் கோட்டைவிட்டது யார்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.