Skip to main content

நியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குங்க... எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்.. ரகசியமாக நடந்த  பூஜை! 

Published on 20/01/2020 | Edited on 20/01/2020

உலகத் தமிழர்கள் எல்லோரும், தமிழர் திருநாளான பொங்கல் திருநாளையும், தமிழ்ப் புத்தாண்டையும் மூன்று நாள் விழாவாகச் சிறப்பாக கொண்டாடியுள்ளார்கள். சொந்த ஊரில் பொங்கல் வைத்து கோயிலில் வழிபட்ட தமிழக முதல்வர் எடப்பாடி தரப்புக்கு வேறொரு விஷயத்தில் கவலையும் பதட்டமும் அதிகரித்து இருப்பதாக சொல்கின்றனர். இதுக்குக் காரணம் ஸ்ரீரங்கம் கோயிலில் நடந்த ஒரு அபசகுன சம்பவம் தான் என்கின்றனர். வருடா வருடம் ஸ்ரீரங்கம் கோயிலில் ’வேடப்பரி’ உற்சவம் கோலாகலமாக நடக்கும் என்கின்றனர். அதாவது தங்கத்தால் ஆன குதிரை வாகனத்தில், ரெங்கநாதரின் திருமேனியை அமர்த்தி, கோயிலின் உள் பிரகாரத்தை வலம்வர வைப்பது வழக்கம். இதுதான் வேடப்பரி உற்சவம். 

 

admk



இந்த வருடம் இந்த உற்சவம் நடந்த போது, எதிர்பாராத விதமாக தங்கக் குதிரையில் இருந்து ரெங்கநாதர் கீழே சாய்ந்து விட்டார். இது ஏதோ கெட்ட சகுனத்தைக் காட்டுது என்றும், அரசுக்கோ அரசை நடத்தறவங்களுக்கோ தீய பலன்கள் ஏற்படும் என்றும் ஐதீகம் என்கின்றனர். இந்தத் தகவல் உடனே முதல்வர் எடப்பாடியின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர். இதைக்கேட்டு பதட்டமான அவர், மீடியாக்களில் நியூஸ் எதுவும் வராமப் பார்த்து கொள்ளுங்கள் என்று சொன்னதாக கூறுகின்றனர். இதற்கு என்ன பரிகார பூஜை செய்ய வேண்டுமோ அதை உடனடியாகச் செய்யுங்கள் என்று உத்தரவு போட்டுள்ளதாக சொல்கின்றனர். இதைத் தொடர்ந்து ரெங்கநாதர் சரிந்த செய்தியை வெளியிட வேண்டாம் என்று கோயில் தரப்பில் இருந்து மீடியாக்களுக்குத் தகவல் சொல்லப்பட்டுள்ளது. 

 

 

admk



மேலும் எடப்பாடி இந்தத் தகவலால் மிரண்டுபோய்ப் பதறியதுக்குக் காரணம், ஏற்கனவே ஜெ. விஷயத்தில் நடந்த சென்ட்டிமெண்ட்தான் என்கின்றனர். 2011-ல் ஸ்ரீரங்கம் தொகுதியில் நின்று ஜெயித்து முதல்வரான ஜெ., அந்த ஆட்சிக் காலத்தில்தான்’சொத்துக் குவிப்பு வழக்கில், நீதிபதி குன்ஹா நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, பதவியை பறிகொடுத்துவிட்டுச் சிறைக்கு சென்றார். ஒரு மாநிலத்தின் முதல்வர் பதவியில் இருக்கும்போதே ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறைக்கு சென்றது இந்திய அரசியல் வரலாற்றில் இதுதான் முதல் சம்பவம் என்று சொல்லப்படுகிறது. அதனால் ஜெ.’வுக்கு இந்தக் கோயில் தொடர்பாக பக்தியும் பயமும் கலந்த சென்ட்டிமெண்ட் தயக்கம் உண்டு. திரும்ப அவர் ஸ்ரீரங்கத்தில் நிற்கவில்லை. இந்த சென்ட்டிமெண்டால்தான் எடப்பாடி அதிர்ச்சியானார். அவருக்காக ஸ்ரீரங்கம் கோயிலில் 13-ந் தேதியன்று நள்ளிரவில் ஒருமணி நேரத்துக்கும் மேலாக பரிகார பூஜை ரகசியமாகவே நடத்தப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.