Skip to main content

நியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குங்க... எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்.. ரகசியமாக நடந்த  பூஜை! 

Published on 20/01/2020 | Edited on 20/01/2020

உலகத் தமிழர்கள் எல்லோரும், தமிழர் திருநாளான பொங்கல் திருநாளையும், தமிழ்ப் புத்தாண்டையும் மூன்று நாள் விழாவாகச் சிறப்பாக கொண்டாடியுள்ளார்கள். சொந்த ஊரில் பொங்கல் வைத்து கோயிலில் வழிபட்ட தமிழக முதல்வர் எடப்பாடி தரப்புக்கு வேறொரு விஷயத்தில் கவலையும் பதட்டமும் அதிகரித்து இருப்பதாக சொல்கின்றனர். இதுக்குக் காரணம் ஸ்ரீரங்கம் கோயிலில் நடந்த ஒரு அபசகுன சம்பவம் தான் என்கின்றனர். வருடா வருடம் ஸ்ரீரங்கம் கோயிலில் ’வேடப்பரி’ உற்சவம் கோலாகலமாக நடக்கும் என்கின்றனர். அதாவது தங்கத்தால் ஆன குதிரை வாகனத்தில், ரெங்கநாதரின் திருமேனியை அமர்த்தி, கோயிலின் உள் பிரகாரத்தை வலம்வர வைப்பது வழக்கம். இதுதான் வேடப்பரி உற்சவம். 

 

admk



இந்த வருடம் இந்த உற்சவம் நடந்த போது, எதிர்பாராத விதமாக தங்கக் குதிரையில் இருந்து ரெங்கநாதர் கீழே சாய்ந்து விட்டார். இது ஏதோ கெட்ட சகுனத்தைக் காட்டுது என்றும், அரசுக்கோ அரசை நடத்தறவங்களுக்கோ தீய பலன்கள் ஏற்படும் என்றும் ஐதீகம் என்கின்றனர். இந்தத் தகவல் உடனே முதல்வர் எடப்பாடியின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர். இதைக்கேட்டு பதட்டமான அவர், மீடியாக்களில் நியூஸ் எதுவும் வராமப் பார்த்து கொள்ளுங்கள் என்று சொன்னதாக கூறுகின்றனர். இதற்கு என்ன பரிகார பூஜை செய்ய வேண்டுமோ அதை உடனடியாகச் செய்யுங்கள் என்று உத்தரவு போட்டுள்ளதாக சொல்கின்றனர். இதைத் தொடர்ந்து ரெங்கநாதர் சரிந்த செய்தியை வெளியிட வேண்டாம் என்று கோயில் தரப்பில் இருந்து மீடியாக்களுக்குத் தகவல் சொல்லப்பட்டுள்ளது. 

 

 

admk



மேலும் எடப்பாடி இந்தத் தகவலால் மிரண்டுபோய்ப் பதறியதுக்குக் காரணம், ஏற்கனவே ஜெ. விஷயத்தில் நடந்த சென்ட்டிமெண்ட்தான் என்கின்றனர். 2011-ல் ஸ்ரீரங்கம் தொகுதியில் நின்று ஜெயித்து முதல்வரான ஜெ., அந்த ஆட்சிக் காலத்தில்தான்’சொத்துக் குவிப்பு வழக்கில், நீதிபதி குன்ஹா நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, பதவியை பறிகொடுத்துவிட்டுச் சிறைக்கு சென்றார். ஒரு மாநிலத்தின் முதல்வர் பதவியில் இருக்கும்போதே ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறைக்கு சென்றது இந்திய அரசியல் வரலாற்றில் இதுதான் முதல் சம்பவம் என்று சொல்லப்படுகிறது. அதனால் ஜெ.’வுக்கு இந்தக் கோயில் தொடர்பாக பக்தியும் பயமும் கலந்த சென்ட்டிமெண்ட் தயக்கம் உண்டு. திரும்ப அவர் ஸ்ரீரங்கத்தில் நிற்கவில்லை. இந்த சென்ட்டிமெண்டால்தான் எடப்பாடி அதிர்ச்சியானார். அவருக்காக ஸ்ரீரங்கம் கோயிலில் 13-ந் தேதியன்று நள்ளிரவில் ஒருமணி நேரத்துக்கும் மேலாக பரிகார பூஜை ரகசியமாகவே நடத்தப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
PM Modi remembers former CM of Tn

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16.03.2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டன. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

அந்த வகையில், ஐந்து முறை தமிழகத்திற்கு வந்திருந்த பிரதமர் மோடி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் முதன் முறையாக நேற்று (18.03.2024) தமிழகம் வந்திருந்தார். இதனையடுத்து பா.ஜ.க. சார்பில் கோவையில் நடைபெற்ற பிரமாண்ட வாகன அணிவகுப்பில் (ரோடு ஷோ) பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது திறந்த வெளி வாகனத்தில் பேரணியாகச் சென்று சாலையில் இருபுறமும் உள்ள மக்களை நோக்கி கையசைத்தவாறே பேரணியில் ஈடுபட்டார். இந்த வாகனத்தில் மத்திய இணையமைச்சர் எல். முருகன், பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தார். இந்த பேரணியை ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகே சென்று மாலை 6:45 மணிக்கு நிறைவு செய்தார். அதனைத் தொடர்ந்து கேரள மாநிலம் பாலக்காடு சென்று பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

இந்நிலையில், பாலக்காட்டில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி சேலத்திற்கு வந்தார். அங்கு கெஜல்நாயக்கன்பட்டி என்ற இடத்தில் நடைபெற்ற பா.ஜ.க. பரப்புரை பொதுக்கூட்டத்தில் மோடி உரையாற்றினார். முன்னதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸின் கைகளைப் பிடித்துக்கொண்டு மோடி நலம் விசாரித்தார். இந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. கூட்டணி கட்சித் தலைவர்களான ஓ.பி.எஸ்., ராமதாஸ், பாரிவேந்தர், ஏ.சி. சண்முகம், அன்புமணி ராமதாஸ், டி.டி.வி. தினகரன், சரத்குமார், ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

PM Modi remembers former CM of Tn

இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், பாரத அன்னை வாழ்க. எனதருமை தமிழ் சகோதர சகோதரிகளே எனத் தமிழில் பேச்சை தொடங்கினார். மேலும், “கோட்டை மாரியம்மன் வாழும் புண்ணிய பூமிக்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனக்கு கிடைத்திருக்கும் ஆதரவால் தி.மு.க.வுக்கு தூக்கம் தொலைந்துவிட்டது. தமிழகத்தில் எனக்கு கிடைத்திருக்கும் ஆதரவு பற்றித்தான் நாடு முழுவதும் இப்போது பேச்சாக இருக்கிறது. ஆடிட்டர் ரமேஷ் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கொலை செய்யப்பட்டதை மறக்கவே முடியாது. கட்சிக்காக நேர்மையாக உழைத்தவர்களை படுகொலை செய்துவிட்டார்கள். ராமதாஸின் அனுபவம், அன்புமணியின் திறமை பா.ஜ.க. கூட்டணிக்கு உதவியாக இருக்கும். வளர்ச்சியடைந்த இந்தியா, வளர்ச்சியடைந்த தமிழகத்தை அமைக்க 400 இடங்களைத் தாண்ட வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தி.மு.க.வினர் எவ்வளவு இழிவுபடுத்தினர் என்பதை நினைத்து பாருங்கள். தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வரான காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டம்தான் எனக்கு உத்வேகம் அளித்தது. ஜி.கே. மூப்பனாரை பிரதமராக விடாமல் தடுத்தது காங்கிரஸ்தான்” எனத் தெரிவித்தார்.

Next Story

'இனி அந்த வேட்டியைக் கூட கட்ட முடியாது'- கடம்பூர் ராஜூ பேச்சு

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'We can't even build that dhoti anymore' - Kadambur Raju's speech

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதிமுக பெயர், கொடி, சின்னம் லெட்டர் பேடை பயன்படுத்த ஓபிஎஸ்க்கு தடை விதிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கில் ஓபிஎஸ்க்கு நிரந்தர தடை விதித்துள்ளது நீதிமன்றம். இந்நிலையில் தூத்துக்குடியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசுகையில், 'இதற்கு முன்பாவது இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது. இப்பொழுது நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.

துரோகம் பண்ணியவர்கள் இனி அந்த வேட்டியைக்கூட கட்ட முடியாது. பல்வேறு சோதனைகளுக்கு பிறகு இரண்டு கோடிக்கு மேற்பட்ட தொண்டர்களை அதிமுக சேர்த்துள்ளது.  நாள் முழுவதும் சோதனை தான். ஒன்று நீதிமன்றம் அல்லது தேர்தல் கமிஷன். இப்படி இத்தனை குழப்பங்களையும் சந்தித்து சவால்களை சந்தித்து அத்தனையும் சாதனைகளாக மாற்றியுள்ளோம். இன்று அதிமுகவை பழைய ஒழுங்கோடு இன்னும் சொல்லப்போனால் முன்பு இருந்ததை விட  நல்ல முறைக்கு கொண்டுவந்துள்ளார் எடப்பாடி. இன்றைக்கும் இந்த தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டதா? இல்லை சேருமா? இதுதான் இன்றைக்கு பட்டிமன்றம், விவாதம் போய்க்கொண்டிருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலிலும் கூட பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என்று தெளிவாக கட்சியின் பொதுச் செயலாளர் சொல்லிவிட்டார். இந்த கருத்து ஒவ்வொரு அதிமுக தொண்டர்களுடைய கருத்து தான்'' என்றார்.