Skip to main content

எடப்பாடிக்கு பயத்தை ஏற்படுத்திய அமைச்சர்கள்... பாஜகவின் நெருக்கடி... அமைச்சர்களால் கடும் அதிருப்தியில் இபிஎஸ்!  

Published on 03/02/2020 | Edited on 03/02/2020

தமிழக தலைநகரில் உள்ள கோட்டையிலும் பரபரப்பாக சில விஷயங்கள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இது பற்றி அரசியல் வட்டாரங்களில் விசாரித்த போது, தனக்கு கிடைத்த முதல்வர் பதவியை இறுக்கமாக பிடித்துக்கொண்டு இத்தனை காலம் சிக்கல் இல்லாமல் சமாளித்த எடப்பாடியை அரசியல் ராஜதந்திரியாக இமேஜ் டெவலப் செய்கிற வேலைகள் நடந்துக் கொண்டிருக்கிறது என்கின்றனர். ஆனால், அவரோட அமைச்சரவையில் இருக்கிறவங்களே இடபடிக்கு சிக்கலை ஏற்படுத்துகிறார்கள் என்ற  பயமும் எடப்பாடிக்கு இருக்கிறது. 

 

admk



பா.ஜ.க.வைப் பற்றி மந்திரி பாஸ்கரன் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். பா.ஜ.க. ஆதரவாளரான ராஜேந்திரபாலாஜியோ தி.மு.க.வையும் தி.க.வையும் அடித்து  விரட்டுங்கள் என்று ரஜினி ரசிகர்களை தூண்டிவிடும் விதமாக பேசியிருந்தார். மந்திரி கருப்பணனோ, ஊராட்சியில் தி.மு.க. வெற்றி பெற்ற இடங்களுக்கு உள்ளாட்சி நிதியை ஒதுக்க மாட்டோம் என்று ஓப்பனாக கூறியிருந்தார். இது எல்லாமே கடும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தார். கடந்த திங்கட்கிழமையன்று  அமைச்சர்களைக் கூப்பிட்டு கறாராக கூறியிருந்தார் எடப்பாடி.

 

admk



சீனியர் அமைச்சர்களான தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராசன் இவர்களிடம் எல்லாம் தனித்தனியாக ஆலோசனை நடத்திய எடப்பாடி, மற்ற அமைச்சர்களை ஒன்றாக வைத்து ஆலோசித்து பேசியிருந்தார். அவர்களிடம் மாவட்டத்தில் கோஷ்டி அரசியல் நடந்தால் வெற்றி பெற முடியாது. கட்சியின் மாவட்ட நிர்வாகிகளோடு அட்ஜஸ்ட் பண்ணி நடந்து கொள்ளுங்கள் என்றும் கூறியதாக சொல்லப்படுகிறது. அது உங்க எதிர்காலத்துக்கும் நல்லதாக இருக்கும் என்றும் சொன்னதாக கூறுகின்றனர். நடப்பது அ.தி.மு.க. ஆட்சி என்று அவர்களிடம் கறாராக கூறியுள்ளார் எடப்பாடி.


ஆனால் அமைச்சர்களெல்லாம் தங்கள் மாவட்டத்தோட கட்சி நிர்வாகம் என்ன நிலைமையில் இருக்கு என்று ஒரு ஃபைல் எடுத்துக் கொண்டு சென்றுள்ளார்கள். அது பற்றி எதுவும் பேச அனுமதிக்கவில்லை என்ற வருத்தமும் கோபமும் அமைச்சர்களிடம் இருப்பதாக சொல்கின்றனர். லோக்கலில் தங்கள் செல்வாக்கை நிலை நிறுத்தினால்தான் அரசியல் பண்ணமுடியும் என்று அமைச்சர்கள் சுயநலத்தோடு தான் காய் நகர்த்துகிறார்கள். இது எடப்பாடிக்கும் தெரியும். பொது நிகழ்வுகளில் அமைச்சர்கள் எகிறுவதால், அவர்களிடம் கறார் குரலில் எடப்பாடி பேசினாலும், டெல்லியை சரிக்கட்டி சமாளிப்பது பெரிய வேலையாக உள்ளதாக கூறுகின்றனர். இதில்  இவங்க இப்படி பண்ணுறாங்களேன்னு எடப்பாடி கடும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.