Skip to main content

ஜெயலிதாவிற்கு ஏற்பட்ட அதே பயம் எடப்பாடிக்கும்... யாரைக் கேட்டு இப்படி பண்றீங்க... எடப்பாடி மீது கோபத்தில் பாஜக!

Published on 17/02/2020 | Edited on 17/02/2020

சமீபத்தில் காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று முதல்வர் எடப்பாடி அறிவித்தார். இது பற்றி விசாரித்த போது, நாடாளுமன்றத் தேர்தலிலும், ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க. டேமேஜ் ஆனதால், அதைச் சரிசெய்வதற்கு எதையாவது அதிரடியாக அறிவிக்க வேண்டும் என்று நினைத்ததாக சொல்லப்படுகிறது. 2004 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. 40-க்கு 40-ல் முழுவதுமாக தோல்வியடைந்தது. இதனால் ஷாக்கான அப்போதைய முதல்வரான ஜெயலலிதா கூட மதமாற்றத் தடைச் சட்டம், ஆடு-கோழி பலியிடத் தடை, அரசு ஊழியர்கள் மீதான எஸ்மா, டெஸ்மா இதையெல்லாம் ரத்து செய்தார். அதே போல், முதல்வர் எடப்பாடி தற்போது வேளாண் மண்டல அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தத் திட்டத்துக்கு விவசாயிகளிடமிருந்தும் அரசியல் கட்சிகளிடமிருந்தும் பலத்த வரவேற்பு கிடைக்கத் தொடங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. 

 

eps



மேலும் காவிரி டெல்டாவில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அறிவித்துள்ள மத்திய அரசு தான் இது பற்றி முறைப்படி அறிவிக்கவேண்டும் என்றும் சொல்கின்றனர். வேளாண் பாதுகாப்பு மண்டலத்தைக் கொண்டு வர வேண்டுமென்றால், அந்தப் பகுதியில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட எதையும் எடுக்கக்கூடாது. ஆனால் அண்மையில்தான் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களுக்கு சுற்றுச் சூழல் அனுமதி தேவையில்லை, பொதுமக்களின் கருத்தைக் கேட்க வேண்டியதில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்தது. ஓ.என்.ஜி.சி., வேதாந்தா நிறுவனங்களோடு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதேபோல் எடப்பாடியும் அண்மையில் ஒரு பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைக்கு ஒப்பந்தம் போட்டிருக்கிறார் என்கின்றனர். ஹைட்ரோ கார்பனுக்கு எதிராகப் போராடுகிறவர்கள் இதுபற்றி கேள்வி எழுப்பி வருகின்றனர். 

அதில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்றால், அந்தப் பகுதியில் நாலடிக்கு மேல் மணலைத் தோண்டி எடுக்கக் கூடாது. ஆனால் இப்போது எடப்பாடி தரப்பு ஆளுங்களே பல அடி ஆழத்துக்குக் குழி தோண்டி, ஆற்று மணலையும் சவுடு மண்ணையும் எடுத்துக்கொண்டு இருக்கிறாரகள் என்று பொதுமக்களே கேள்வி கேட்டுள்ளனர். இந்த நிலையில், யாரைக்கேட்டு இப்படியொரு திட்டத்தை அறிவித்துள்ளீர்கள் என்று  இன்னொரு பக்கம் மத்திய அரசு, தலைமைச் செயலாளர் சண்முகத்தைக் கேள்விகளால் துளைத்து எடுத்துள்ளனர். இப்படி மத்திய அரசின் கோபத்தை இதன் மூலம் சம்பாதித்திருக்கும் எடப்பாடி, டெல்லியை சமாதானப்படுத்தும் நடவடிக்கைகளையும் அங்கிருக்கும் தன் லாபி மூலம் முடுக்கிவிட்டுள்ளார் என்கின்றனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.