Skip to main content

ஊழலில் அண்ணா பல்கலைக்கழகம்...  எடப்பாடிக்கு சென்ற லிஸ்ட்...  அமைதியான அதிமுக அமைச்சர்!

Published on 26/03/2020 | Edited on 26/03/2020

ஊழல்களில் சிக்கித் திணறும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் 135 பேரின் பதவியைப் பறிக்கவேண்டும் என அரசுக்கு பரிந்துரைத்துள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி அனந்தகுமார் கமிட்டியின் அறிக்கை உயர்கல்வித்துறைக்கு தலைவலியை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. பேராசிரியர் நியமன ஊழல்களுக்குக் காரணமான முன்னாள் துணைவேந்தர்களைக் கைது செய்யவேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், துணைவேந்தராக மன்னர் ஜவஹர் இருந்த காலத்தில் நடந்துள்ள பல முறைகேடுகளும் தற்போது விஸ்வரூபம் எடுக்கின்றன.

 

admk



இதுகுறித்து நம்மிடம் பேசிய பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், "அண்ணா பல்கலைக்கழகம் நிர்வாக வசதிக்காக சென்னை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை என கலைஞர் ஆட்சியின் போது (2007) ஐந்தாகப் பிரிக்கப்பட்டது. இதற்காக 5 துணைவேந்தர்களும் நியமிக்கப்பட்டார்கள். பல்கலைக்கழகத்தில் எழுந்த ஊழல் புகார்களால், பிரிக்கப்பட்ட பல்கலைக்கழக நிர்வாகத்தை முந்தைய ஜெயலலிதா ஆட்சியின் (2012) போது மீண்டும் ஒன்றிணைத்தனர்.

இப்படி இணைக்கும்போது பேராசிரியர்கள், ஊழியர்கள் என பலரும் நியமிக்கப்பட்டார்கள். அந்த நியமனங்களில் பல்வேறு ஊழல்கள் நடந்திருப்பதாக பலதரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், ஐ.ஏ.எஸ். அதிகாரி அனந்தகுமார் தலைமையில் 2017-ல் ஒரு கமிட்டியை அமைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. உடனடியாக விசாரணையைத் துவக்கிய கமிட்டி, 2012-ல் நடந்த நியமனங்களில் விதிமீறல்கள் உட்பட பல்வேறு ஊழல்கள் நடந்திருப்பதைக் கண்டுபிடித்தது. பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனங்களில் 135 பேர் ’தகுதியற்றவர்கள்’எனப் பதிவு செய்திருக்கிறது கமிட்டி. தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் பல்வேறு உறுப்புக் கல்லூரிகளிலும் அந்த 135 பேரும் பணிபுரிந்து வரும் நிலையில், அவர்களை பதவியிலிருந்து நீக்கவும் வலியுறுத்தியிருந்தார் அனந்தகுமார்.

 

admk



அண்ணா பல்கலைக்கழகம் ஒன்றிணைந்தபோது சென்னையில் மன்னர்ஜவஹர், கோவையில் ராதாகிருஷ்ணன், திருச்சியில் ராமச்சந்திரன், நெல்லையில் காளியப்பன், மதுரையில் தேவதாஸ் ஆகியோர் துணைவேந்தர்களாக இருந்தனர். இவர்கள்தான் தகுதியற்ற 135 பேரையும் நியமித்தனர். பேராசிரியர் நியமனங்கள் கோடிகளிலும், ஊழியர் நியமனங்கள் லட்சங்களிலும் நடந்தன.

இதுபற்றிய கமிட்டியின் அறிக்கையை கடந்த 2018-ல் எடப்பாடி அரசிடம் ஒப்படைத்தார் அனந்தகுமார். ஆனால், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 2 வருடங்களாகியும் எந்த நடவடிக்கையும் இல்லை. அதேசமயம், தற்போதைய துணைவேந்தர் சூரப்பா தலைமையில் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில், அனந்தகுமார் கமிட்டியின் பரிந்துரைகளை நிராகரிக்கலாம் என முடிவு செய்திருக்கிறார்கள். இதனையறிந்து கொந்தளித்த கல்வியாளர்கள் பலரும், "ஊழல் பேராசிரியர்களைப் பதவியிலிருந்து நீக்கு; அனந்தகுமார் கமிட்டியின் அறிக்கையை அமல்படுத்து' என்கிற கோஷத்தை முன்னிறுத்தி தமிழக கவர்னர் புரோகித்துக்கும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கும் புகார் மனு அனுப்பியுள்ளனர். ஊழல் பேராசிரியர்களுக்கு கல்தா கொடுப்பதுடன் அவர்கள் மீதும் அவர்களை நியமனம் செய்த துணைவேந்தர்கள் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட வேண்டும். அப்போதுதான் இனிவரும் காலங்களில் துணைவேந்தர்கள் ஊழல் செய்யாமல் இருப்பார்கள்''‘என்கின்றனர்.


இந்த ஊழல் விவகாரங்கள் பெரிதாக வெடித்துள்ள நிலையில், 2008-ல் நடந்த மற்றொரு நியமன ஊழலும் பூதாகரமாகி வருகிறது. இது குறித்து நம்மிடம் பேசிய உயர்கல்வித்துறை அதிகாரிகள், "மன்னர் ஜவஹர் துணைவேந்தராக இருந்தபோது, தற்காலிக விரிவுரையாளர்களாக இருந்த 98 பேரை கடந்த 2008-ல் நிரந்தரப் பணியாளர்களாக நியமித்தார் மன்னர் ஜவஹர். இந்த நியமனங்களுக்கு வெளிப்படையான அறிவிப்போ, விளம்பரங்களோ மன்னர் ஜவஹர் செய்யவில்லை. அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சிலின் விதிகளும், பல்கலைக்கழக மானிய குழுவின் விதிமுறைகளும் இதில் மீறப்பட்டுள்ளன. சுழற்சி முறை இடஒதுக்கீடும் பின்பற்றவில்லை. நேர்காணல் மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பும் நடக்கவில்லை.

ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்த மிக மிக தகுதி குறைவானவர்களும் விரிவுரையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த முறைகேடுகளில் சுமார் 25 கோடி ரூபாய் லஞ்ச பணமாக விளையாடியது. எம்.ஐ.டி. கல்லூரியின் எலெக்ட்ரானிக்ஸ் துறையைச் சேர்ந்த பிரகாஷ், மணிகண்டன் ஆகிய இருவரையும் தனது பிரதான புரோக்கர்களாக வைத்திருந்தார் மன்னர் ஜவஹர். இதில் மணிகண்டன், மன்னர் ஜவஹரின் நேரடி உதவியாளர். அனந்தகுமார் கமிட்டியின் அறிக்கையைத் தொடர்ந்து தற்போது இந்த நியமன ஊழல்களும் கிளம்பியுள்ளன. இதற்கான ஆதாரங்களை ராஜ்பவனுக்கும் அரசுக்கும் அனுப்பியபடி இருக்கிறார்கள் பேராசிரியர்கள். ஆனால், நடவடிக்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய அமைச்சர் அன்பழகனும், நடவடிக்கை எடுக்க வேண்டிய துணைவேந்தர் சூரப்பாவும் மௌனமாகவே இருக்கிறார்கள். இந்த விவகாரம் விரைவில் நீதிமன்றங்களில் வெடிக்கவிருக்கிறது''‘என்கின்றனர்.

இதுகுறித்து மன்னர் ஜவஹரிடம் கேட்ட போது, "என் பணிக்காலத்தில் எந்த நியமனங்களிலும் விதிமீறல் கிடையாது. ரிசர்வேஷன், ரோஸ்டர் உள்ளிட்ட அனைத்து விதிகளும் பின்பற்றப்பட்டே நியமனங்கள் நடந்தன. அதற்கு சிண்டிகேட்டும் ஒப்புதல் தந்திருக்கிறது'' என்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

Next Story

“எடப்பாடி செய்த சதியை முறியடிக்கத் தயாராக இருக்கிறேன்” - ஓ.பி.எஸ்.ஸின் பிரத்யேக பேட்டி

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
ready to defeat tready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPShe conspiracy of EPS says Exclusive interview with OPS

தேனி பாராளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி. கூட்டணி சார்பில் அ.ம.மு.க. வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.ஸின் முழு ஆதரவும் டிடிவிக்கு இருக்கிறது. அதோடு டிடிவியும் நான் போட்டி போடுகிறேன் என்று தெரிந்து தான் இத்தொகுதியை ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகன் ஓ.பி.ஆர்.ரும் எனக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸும் டி.டி.வி.யும் தேர்தல் களத்தில் நெருக்கமாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய டிடிவி தினகரன் மதியத்துக்கு மேல் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதாக இருந்தது. இந்த விஷயம் ஓபிஎஸ்-க்கு தெரியவே, மதியம் ஒன்னேகால் மணிக்கு எல்லாம் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் நின்று கொண்டு டிடிவியை வரவேற்க காத்துக் கிடந்தார். அவருடன் ஆதரவாளர்களான செல்லமுத்து மற்றும் சையதுகான் ஆகியோர் இருந்தனர்.

ad
ஓபிஎஸ் உடன் நமது நிருபர்

அப்போது நாம் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்ஸிடம் சென்று நம்மை நக்கீரன் நிருபர் என்று அறிமுகப்படுத்திய உடனே ஆசிரியர் நல்லா இருக்காரா? என்று கேட்டார். அதைத் தொடர்ந்து நாமும் ஆசிரியர் நலமாக இருக்கிறார் என்று கூறியவாறே தொகுதியின் தேர்தல் பணி எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டபோது, “நான் போட்டி போடும் அந்த தொகுதியில் பிரதமர் மோடி தான் போட்டிப் போடுவதாக இருந்ததால் அங்குள்ள கட்சியினர் தொகுதியை ஒரு கட்டுக்கோப்பாக பிரதமருக்காக தயார் செய்தும் வைத்திருந்தனர். ஆனால் பிரதமர் இங்கே போட்டி போடவில்லை என்பதால் என்னையத்தான் நிற்க சொன்னார். அதன்பேரில் தான் போட்டி போடுகிறேன்” என்றவரிடம் அத்தொகுதியில் முக்குலத்தோர் சமூக ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டபோது, அத்தொகுதியில் மொத்தம் பதினாறு லட்சம் ஓட்டுகள் இருக்கிறது. இதில் சிறுபான்மை சமூக ஓட்டுகள் இரண்டு லட்சம் இருப்பதாக தெரிகிறது. அதுபோல் முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் ஆறு லட்சத்திற்கு மேல் இருப்பதாக தெரிகிறது. மீதி மற்ற சமூக மக்கள் இருக்கிறார்கள் என்றவரிடம், உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு என்னுடைய வெற்றி உறுதி இறைவன் இருக்கிறார்” என்றார்.

உங்களை பெயரிலேயே ஐந்து சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே எடப்பாடி செய்த சதி. அதையும் முறியடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் கூட டிடிவிக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்ண இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே “அதுவும் நடக்கலாம் நான் சொன்னது போல் தமிழகம் முழுவதுமே அ.தி.மு.க. படுதோல்வி அடையும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

ready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPS

அப்போது தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இரண்டேகால் மணிக்கு டிடிவி வந்தார். அவரை ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் மரத்தடியிலேயே நின்றார். அப்போது பயனாளிகளுக்காக போடப்பட்டிருந்த இரும்பு சேரில் ஓ.பி.எஸ் உடன் வந்த இருவரும் உட்கார்ந்து இருந்தனர். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் தாக்கல் செய்துவிட்டு வந்தார். வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்தார். அதுவரை ஓபிஎஸ் டிடிவியுடனே நின்றுவிட்டு டிடிவியை பிரச்சார வேனில் திரும்ப வழியனுப்பி விட்டுத்தான் திரும்பினார்.