Skip to main content

இது தான் நமக்குச் சரியான நேரம்... எடப்பாடி போட்ட அதிரடி திட்டம்... கனிமொழியால் களத்தில் இறங்கிய ஸ்டாலின்!

Published on 06/04/2020 | Edited on 06/04/2020


ஊரடங்கால் வீட்டில் இருந்த தி.மு.க. தலைவர் ஸ்டாலின், வெள்ளிக் கிழமையன்று தொகுதியில் களப்பணியில் ஈடுபட்டார்.இது பற்றி விசாரித்த போது,ஸ்டாலின் வீட்டில் இருக்கார் என்று தெரிஞ்சதும் எடப்பாடி,ஸ்டாலின் இந்த நேரத்தில் இப்படி இருப்பதுதான்,நாம் அரசியல் செய்ய பயன்படும் என்று சக அமைச்சர்களிடம் கூறியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், தி.மு.க. எம்.எல்.ஏக்கள் ஆளுந்தரப்புக்கு முன்பே ஃபீல்டில் இறங்கியதாகச் சொல்லப்படுகிறது. 

 

dmk


 

அதிலும் குறிப்பாக, தி.மு.க மகளிர் அணிச் செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி,தன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒன்றரை கோடியைக் கொரோனா தொடர்பான மருத்துவ உபகரணங்களைத் தனது தொகுதிக்கு வாங்குவதற்காக ஒதுக்கினார்.சென்னையில் இருந்து 700 கி.மீ.தூரம் காரிலேயே இரவு நேரத்தில் பயணித்துத் தூத்துக்குடி சென்ற கனிமொழி,அங்குள்ள ஆட்சியர் சந்தீப் நந்தூரியைப் பார்த்து, காசோலையைக் கொடுத்திருக்கார். அதோடு, தூத்துக்குடி ஜி.ஹெச்.சுக்கு சென்று, அங்குள்ள டாக்டர்களுக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கும் முகக் கவசங்கள், சானிடைசர்கள் மற்றும் நோய்த் தடுப்பு கவச ஆடைகள் உள்ளிட்ட பொருட்களையும் விநியோகித்துள்ளார்.தூத்துக்குடி தொகுதியிலேயே தங்கியிருக்கும் கனிமொழி,தொகுதி எம்.எல்.ஏ.அனிதாவுடன் சேர்ந்து அங்குள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்களையும் கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் கனிமொழி களமிறங்கியதால் தான், மு.க.ஸ்டாலினும் கொளத்தூர் தொகுதிக்கு நேரில் சென்றார் என்று தகவல் பரவியது. ஆனால் கனிமொழி தன் கட்சித் தலைவரான ஸ்டாலினிடம் கூறிவிட்டுத்தான் தூத்துக்குடி கிளம்பினார்.அவர் தூத்துக்குடியில் இருந்த போது,ஸ்டாலின் ஒரு டாக்டர்கள் டீமுடன் வீடியோ கான்பரன்சில் ஆலோசனை நடத்தி, நேரடியாக விசிட் அடிப்பதில் உள்ள மருத்துவரீதியான பின்னணிகள், தேவையான உபகரணங்கள், ட்ரீட் மெண்ட் முறை, அரசின் நடவடிக்கைகள் பற்றிக் கேட்டு தெரிந்து கொண்டதாகக் கூறுகின்றனர். அதோடு, பூங்கோதை ஆலடி அருணா தலைமையிலான தி.மு.க. மருத்துவர் அணி சார்பில் 70 டாக்டர்களை களமிறக்கினார்.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பிக்கள்,ஊராட்சி உறுப்பினர்களுக்கு ஒவ்வொரு நாளும் என்ன வேலைத்திட்டமென்பதையும் விளக்கிவிட்டு,அவரும் வெள்ளிக் கிழமையன்று கொளத்தூர் தொகுதியில் தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள், மருத்துவத் துறையினர், பொதுமக்கள் என்று எல்லாரையும் சந்தித்து உதவிகளை வழங்கினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்