Skip to main content

தினகரன் கட்சியின் முக்கிய புள்ளிக்கு தூது அனுப்பிய எடப்பாடி... கடும் கோபத்தில் இருக்கும் எடப்பாடி!

Published on 26/11/2019 | Edited on 26/11/2019

அ.ம.மு.க.வில் இருந்து பலரும் அ.தி.மு.க.வில் இணைந்துகொண்டிருக்கும் நிலையில்... "அக்கட்சியில் இருக்கும் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் வந்தால் மட்டும் அ.தி.மு.க.வில் சேர்த்துக்கொள்ள மாட்டோம்' என்று கறாராக இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. "பல்வேறு கட்சிகளுக்கு பழனியப்பன் தூது அனுப்பிக்கொண்டிருப்பதால்தான், அவரை எடப்பாடி வெறுக்கிறார்' என்கிறார்கள். அதேநேரத்தில் எதிர் தரப்பினரோ, "அனுப்பிய தூதுவர்களை எல்லாம் பழனியப்பன் துரத்திவிட்டதால்தான் அவர் மீது எடப்பாடி வெறுப்பை காட்டுகிறார்' என்கிறார்கள்.

 

admk



அ.ம.மு.க.வுக்கு சென்றுவிட்ட பழனியப்பன், ஆர்.ஆர்.முருகன் ஆகிய இருவரையும் ஆரம்பத்தில் இருந்தே அ.தி.மு.க.வில் இணைப்பதற்காக எடப்பாடி முயற்சி எடுத்துள்ளார். பாண்டிச்சேரியில் 18 எம்.எல்.ஏக்கள் இருந்தபோது பாப்பிரெட்டிப்பட்டி வரலட்சுமி கிழங்கு மில் உரிமையாளர் அன்பழகன் மூலமாக எடப்பாடி தூது அனுப்பியிருக்கிறார். பல மில்களின் ஓனரான இந்த அன்பழகன் எடப்பாடிக்கு மிகவும் நெருக்கமாக இருந்துவருவதாகச் சொல்கிறார்கள்.
 

admk



பழனியப்பன், அண்ணா தொழிற்சங்க சிறப்புத் தலைவராக இருந்தபோது வரலட்சுமி கிழங்கு மில்லில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு போதிய ஊதிய உயர்வு கொடுக்காமல் இருந்திருக்கிறார் அன்பழகன். இந்த விவகாரம் பழனியப்பனிடம் சென்றபோது, அவர் இது தொடர்பாக அன்பழகனை அழைத்துப் பேசியிருக்கிறார். அப்போது இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால், இருவருக்கும் பேச்சுவார்த்தையே இல்லை என்றாகிவிட்டது. இப்படி முன்விரோதம் இருந்த நிலையில்தான், எடப்பாடி சொன்னதற்காக தூது சென்றிருக்கிறார் அன்பழகன். பகைமை மறந்து பாண்டியில் கைகுலுக்கிய அன்பழகன், ""நான் இப்போது கட்சி விசயமாக பேச வந்திருக்கிறேன். நீங்களும் முருகனும் அ.தி.மு.க.வுக்கு வந்தால்போதும். நீங்கள் கேட்பது நிச்சயம் கிடைக்கும்''’என்று சொல்ல, அந்த டீலிங்கை மறுத்துள்ளார் பழனியப்பன். அடுத்தகட்டமாக சேலம் மேற்கு எம்.எல்.ஏ.வான வெங்கடாச்சலம் மூலமாக தூது அனுப்பியுள்ளார் எடப்பாடி. அப்போதும் பழனியப்பன் செவி சாய்க்காத நிலையில்தான், பழனியப்பனை மிரட்டி பணிய வைக்கலாம் என்று நினைத்திருக்கிறார் எடப்பாடி.

அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அவரது நிறுவனங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நாமக்கல் மோகனூர் ஆசிரியர் குடியிருப்பில் வசித்துவந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பரும், அரசு காண்ட்ராக்டருமான சுப்பிரமணியம் என்பவரது வீட்டிலும் அதிரடி சோதனை நடத்தினர்.


இந்த சோதனை நடந்த சில நாட்களில் சுப்பிரமணியன் தோட்டத்தில் மர்மமாக இறந்து கிடந்தார். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. சத்தியமூர்த்தி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தியபோது, விசாரணையில் பழனியப்பன் பெயரையும் இணைத்து மிரட்டியுள்ளார். அதிலும் பழனியப்பன் பணிந்து வராததால்தான், அவர் மீதான ஆத்திரத்தில், பல்வேறு கட்சிகளுக்கு தூது அனுப்பும் அவர் அ.தி.மு.க.வுக்கு வந்தால் சேர்த்துக்கொள்ள மாட்டோம் என்று கறாராக இருக்கிறார் எடப்பாடி'' என்கிறார்கள்.

இதுதொடர்பாக அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் பழனியப்பனிடம் நாம் பேசிய போது,

"நான் எந்தக் கட்சிக்கும் தூது அனுப்பவில்லை. முதல்வர்தான் எனக்கு தூது அனுப்பினார். அதற்கான விசயத்தை நான் வெளிப்படையாக சொல்கிறேன். அன்பழகன் மட்டுமல்ல, இன்னும் யார், யார் மூலமாக எனக்கு தூது அனுப்பினார் என்றும் என்னால் சொல்ல முடியும். அதேபோல அவரால் சொல்ல முடியுமா? நான் அவருக்குத் தேவை. அதனால், இழுத்துப் பார்த்தார் முடியவில்லை, அதனால் ஏதேதோ அவிழ்த்துவிடுகிறார்''’என்கிறார்.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.