Advertisment

இதை யாரும் மறுக்கிறீர்களா? இபிஎஸ் ஆவேசத்தால் நிசப்தமான செயற்குழு!!!

dddd

அதிமுகவில் நீடித்து வரும் முதல்வர் வேட்பாளர் யார் என்கிற பஞ்சாயத்திற்கு இன்று கூடிய அதிமுக செயற்குழுவில் இறுதி முடிவு காணப்படவில்லை. இது குறித்து ஓபிஎஸ்சும் இபிஎஸ்சும் கலந்துப் பேசி ஒரு வாரத்தில் தெரிவிக்க வேண்டும் என இருவரையும் கேட்டுக்கொண்டிருக்கிறது செயற்குழு.

Advertisment

செயற்குழு கூட்டத்தில் இரு தரப்புக்குமான வாக்குவாதங்கள் எதிரொலித்த நிலையில், ஒரு கட்டத்தில், ’’உங்களை முதல்வராக்கியது சசிகலா ! என்னை முதல்வராக்கியது ஜெயலலிதா. அதனால் கட்சியைப் பாதுக்காப்பதில் எனக்கு அக்கறை அதிகமாக இருக்கிறது ‘’ என தனக்கே உரிய அமைதியான ஸ்டைலில் ஓபிஎஸ் தெரிவித்திருக்கிறார்.

Advertisment

அப்போது, ’’அண்ணன் ஓபிஎஸ் சொல்வது சரிதான். ஆனால், எங்கள் இருவரையும் முதல்வராக்கியது சசிகலாதான்! இது இங்குள்ள எல்லோருக்கும் தெரியும். இதை யாரும் மறுக்கிறீர்களா?‘’ என இபிஎஸ் சொல்ல செயற்குழுவில் சில நிமிடங்கள் நிசப்தமாகியிருக்கிறது.

இதற்கிடையே, அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளதாக செயற்குழு நடந்துகொண்டிருக்கும் போதே சோசியல் மீடியாக்களில் பரவியது. இது குறித்து கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம்,’’ அதிமுகவில் இரண்டு பிரிவுகள் எல்லாம் கிடையாது. ஒரே பிரிவுதான்!‘’ என்கிறார்.

admk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe