Skip to main content

தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு சட்டத் திருத்தம்: பா.ம.க.வுக்கு வெற்றி! ராமதாஸ்

Published on 16/03/2020 | Edited on 16/03/2020

 

தமிழர்கள் நலனுக்காக பா.ம.க. முன்வைத்த கோரிக்கையை அரசு நிறைவேற்றியுள்ளது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வகை  செய்யும் சட்டத்தில்திருத்தம் செய்வதற்கான முன்வரைவு தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ஆங்கில வழிக் கல்வி மீதான மோகத்தை போக்கி, தமிழ்வழிக் கல்வியை கூடுதலாக ஊக்குவிக்கும் நோக்குடன் கொண்டு வரப்பட்டுள்ள இந்தத் திருத்தம் வரவேற்கத்தக்கது.
 

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட பல்வேறு தேர்வாணையங்களின் மூலம் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் போது, தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மெட்ரிகுலேஷன் பள்ளிகள்  காளான்களாய் பெருகிய நிலையில், ஆங்கில வழிக் கல்வி மீது பெருக்கெடுத்த மோகத்தை தணித்து தமிழ்வழிக் கல்வியை ஊக்குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதற்கான சட்டம் கடந்த 2010-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.

 

ramadoss


 

ஆனால், ஒரு பணிக்கு தேவைப்படும் அடிப்படைக் கல்வித் தகுதியை தமிழ் வழியில் படித்திருந்தாலே, 20% இட ஒதுக்கீட்டை பெறலாம் என்று அப்போதைய சட்டத்தில் கூறப்பட்டிருந்ததால், அந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் பெரும்பாலான பணிகளுக்கு பட்டப்படிப்பு அடிப்படைத் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதால், ஏற்கனவே பள்ளிக்கல்வி முதல் பட்டப்படிப்பு வரை ஆங்கில வழியில் படித்த பலரும், ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை மட்டும் தமிழ் வழியில் படித்து விட்டு, அரசுத் துறை வேலைவாய்ப்புகளில் 20விழுக்காடு இட ஒதுக்கீட்டை பெற்று பயனடைந்து வருகின்றனர். இதனால், இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதன் அடிப்படை நோக்கமே சிதைக்கப்பட்டு விட்டது.
 

இதைத் தடுக்கும் வகையில், பள்ளிக்கல்வி முதல் பட்டப்படிப்பு வரை தமிழ்வழியில் படித்தவர்களுக்கு மட்டும்  இந்த 20% இட ஒதுக்கீடு கிடைக்கும் சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தது. ‘‘பள்ளி முதல் கல்லூரி வரை அனைத்து வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே தமிழ்வழிக் கல்விக்கான 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அது தான் மோசடிகளைத் தடுக்கும்; தமிழ்வழிக் கல்வி வளர்ச்சிக்கு கண்டிப்பாக வழி வகுக்கும்’’ என்று கடந்த ஜனவரி மாதம் 11-ஆம் தேதி வெளியிட்ட டுவிட்டரில் கூறியிருந்தேன். அதை நிறைவேற்றும் வகையில் அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதன்மூலம் தமிழ் வளர்ச்சிக்காகவும், தமிழர்கள் நலனுக்காகவும் பா.ம.க. முன்வைத்த இன்னொரு கோரிக்கையை அரசு நிறைவேற்றியுள்ளது. இது பாமகவுக்கு கிடைத்த மேலும் ஒரு வெற்றியாகும்.


 

தமிழக சட்டப்பேரவையில் செய்யப்பட்டுள்ள திருத்தத்தின் மூலம் தமிழகத்தில் இனி ஆறாம் வகுப்பு முதல் தமிழ் வழியில் பயின்று, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை தமிழில் எழுதியவர்கள் மட்டும் தான், தமிழ் வழி கல்விக்கான 20% இட ஒதுக்கீட்டை பெற முடியும். இதன்மூலம் ஆங்கில வழிக் கல்வி மீதான மோகம் குறைந்து அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தமிழ் வழியில் பயில முன்வருவார்கள். அதன்மூலம் மாணவர்களின் சிந்தனைத் திறன் அதிகரித்து, பல்வேறு துறைகளில் தமிழக மாணவர்கள் சாதனை படைக்கவும், புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தவும் வாய்ப்பு ஏற்படும்.


 

அதுமட்டுமின்றி, புதிய சட்டத்திருத்தத்தின் மூலம் பள்ளிக்கல்வியை ஆங்கிலத்தில் பயின்று, பட்டப் படிப்பை மட்டும் தமிழில் படித்து விட்டு, 20% இட ஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்துவது தடுக்கப்படும். பள்ளிக்கல்வி முதல் தமிழில் படித்த உண்மையான தமிழ்வழிக் கல்வி மாணவர்கள் பயனடைவார்கள்.  அந்த வகையில் இந்தச் சட்டத்திருத்தம் தேவையை உணர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும்.
 

அதேநேரத்தில் தமிழகத்தில் பட்டப்படிப்பு வரை மட்டுமே தமிழ்வழிக் கல்வி வழங்கப்படுகிறது. இதனால் பட்ட மேற்படிப்பு மற்றும் அதற்கும் கூடுதலான கல்வித் தகுதி கொண்ட பணிகளுக்கு 20% இடஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. இதனால் தமிழ்வழிக் கல்வி மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும்  வகையில், இடைக்கால ஏற்பாடாக பட்டப்படிப்பு வரை தமிழில் படித்தவர்களுக்கு 20% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்; நிரந்தர ஏற்பாடாக பட்டமேற்படிப்புகளிலும் தமிழ்வழிக் கல்வியை அறிமுகப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்குப்பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை; மறுக்கப்பட்டால் புகார் தெரிவிக்கலாம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Holiday with pay on polling day; Complaint can be filed if denied

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னயிலும், விசிகவின் தொல்.திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியில் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான அனல் பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஈரோடு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, 'தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தல் நாளன்று தொழிற்சாலைகள், செங்கல் சூளைகள், கட்டுமான பணியிடங்கள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்கள், தற்காலிக தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றும் பொருட்டு தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும். மேலும் வெளிமாநில தொழிலாளர்களைப் பொறுத்தவரை அவரவர் சொந்த மாநிலங்களில் தேர்தல் நடக்கும் நாளன்று தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக அந்தந்த மாநிலங்களுக்கு முன்கூட்டியே செல்ல தொழிற்சாலை நிர்வாகம், செங்கல் சூளை நிர்வாகம் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் வேலை அளிப்பவர்கள் முழுமையான வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு தேர்தல் நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்காத நிர்வாகங்கள் தொடர்பான புகார்களைத் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர், ஈரோடு வினோத்குமார் செல் - 9994380605, 0424 - 22195 21, மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஈரோடு இணை இயக்குநர் சிவகார்த்திகேயன் செல்- 9865072749, 0424-2211780 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம்' இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story

பா.ஜ.க கொடியைத் தீயிட்டு கொளுத்திய பா.ம.க நிர்வாகி; பின்னணி என்ன?

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
What is the background on BJP executive who set fire to BJP flag

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புள்ளநேரி சேர்ந்த மதன்ராஜ் என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில், இரண்டு வீடியோக்களை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, ‘தான் புள்ளநேரி பகுதியைச் சார்ந்தவன் எனவும் பாட்டாளி மக்கள் கட்சியில் சுமார் 12 வருட காலமாக இருந்து வருகிறேன். மேலும் முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளராகவும் உள்ளேன்.

இங்கு பஞ்சாயத்தில் உள்ள பா.ம.க நிர்வாகிகளை கலந்து ஆலோசனை செய்யாமல், பா.ஜ.க.வினர் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். இதன் காரணமாக தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுடைய பஞ்சாயத்தில் 65 சதவீதம் பாட்டாளி மக்கள் கட்சியின் ஓட்டு சதவீதம் உள்ளது. ஆனால், பா.ஜ.க.வில் ஓர் இருவர் தான் உள்ளனர்.

பா.ஜ.க நிர்வாகிகள், மரியாதை எப்படி கொடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியினரை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். எனவே எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக்கூறி பா.ஜ.க.வின் கொடியை எரித்து எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதன் வீடியோவை தனது முகநூலிலும் பதிவு செய்துள்ளார். மேலும் கட்சியினரின் அழுத்தத்தின் காரணமாக சிறிது நேரத்தில் அந்த வீடியோவை டெலீட் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.