style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
2019 பாராளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் 2ம் கட்டமாக 39 தொகுதிகளில் நாளை (ஏப்ரல் 18) நடைபெறுகிறது. இதற்காக வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை தேர்தல் ஆணையம் இன்று வாக்குப்பதிவு மையங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தது. தேர்தல் ஆணையம் முன்னெச்சரிக்கையாக பாலித்தீன் பேப்பர்களையும் வழங்கியுள்ளது. கூடாரம் வேய்ந்த சரக்கு வாகனங்கள் அல்லது சிறிய கன்டெய்னர் ரக வாகனங்களி வாக்கு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்படுகிறது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பேக் செய்து சீல் வைத்தப் பின்னர் வாக்கு எண்ணும் மையங்களுக்குகொண்டு செல்லப்படும். வெயில் மழையால் பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாலித்தீன் சாக்குகளில் பேக்கிங் செய்யப்பட்டுள்ளன.