Skip to main content

தமிழகம் முழுக்க பட்டொளி வீசி பறந்த "கருப்பு கொடிகள்" 

Published on 27/07/2020 | Edited on 27/07/2020
kkkk

 

தமிழகமெங்கும் குறிப்பாக கிராமப் பகுதிகள் அனைத்திலும் இன்று கருப்புக்கொடியாக காட்சியளித்தது. அந்த கருப்பு கொடிகள் மக்களின் வேதனையை துக்கமாகவும், ஆளும் அரசுகளுக்கு எதிர்ப்பாகவும் கண்டனத்தையும் வெளிப்படுத்தியது.

 

மத்திய பா.ஜ.க. அரசு மத்திய மின்திருத்த சட்ட மசோதா 2020ஐ கொண்டு வந்துள்ளது. இதன்மூலம் மின்சாரம் தனியார் மயமாவதும், மின்சாரம் மாநில அரசின் உரிமையிலிருந்து பிரிக்கப்படுகிறது. காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் என இந்தியாவில் உள்ள பல கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால் மத்திய அரசு இச்சட்ட மசோதாவை அறிவித்துவிட்டது. ஆகவே இதை கண்டித்தும் அதை திரும்ப பெற வலியுறுத்தியும்தான் இன்று வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி விவசாய நிலங்களில் கருப்பு கொடி ஏற்றியும் போராட்டம் நடைபெற்றது. 

 

இந்த போராட்டத்தை இலவச மின்சார உரிமை பாதுகாப்பு கூட்டியக்கம் அறிவித்திருந்தது. இதற்கு தமிழகத்தில் எதிர்கட்சிகள் அவைகளின் விவசாய சங்கங்கள் ஆதரவாக களம் இறங்கியது. ஈரோடு மாவட்டம் முழுக்க பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் விவசாயிகள் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் உள்ள விளைநிலங்கள், வீடுகள், மோட்டார் பம்ப் செட், கிணறுகள்  உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் கருப்பு கொடிகளை ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

ஈரோடு மாவட்ட தி.மு.க.செயலாளர் முன்னாள் அமைச்சர் சு.முத்துச்சாமி தனது இல்லத்தின் முன் கட்சியினரோடு கருப்புக்கொடி காட்டி கோஷமிட்டார். இதுபோல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி, அந்தியூர், கொடுமுடி, அம்மாபேட்டை, மொடக்குறிச்சி, அரச்சலூர், கவுந்தபாடி, கோபி, சத்தியமங்கலம், புஞ்சைபுலியம்பட்டி, பவானிசாகர் உட்பட பல்வேறு இடங்களில் விவசாயிகள் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

இதுபற்றி விவசாயிகள் கூறும்போது, "மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த மின் திருத்த சட்டத்தால் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் முழுக்க பறிக்கப்படும், அதேபோல் மின்சாரத்தை பொதுப்பட்டியலில் இணைத்துள்ளார்கள். ஏற்கனவே இருந்த நடைமுறைபோல் விவசாயத்தை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும், இலவச மின்சாரம்  தொடர்பாக மத்திய மாநில அரசுகள் சட்ட பாதுகாப்பை வழங்க வேண்டும், அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம்  உள்ளிட்ட மூன்று அவசர சட்டங்களை உடனே திரும்ப பெற வேண்டும்" என்றார்கள்.

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, காங்கிரஸ், கொ.ம.தே.க, விடுதலை சிறுத்தைகள், அ.ம.மு.க., உட்பட பல கட்சி நிர்வாகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஈரோடு போலவே தமிழகம் முழுக்க ஆளும் அரசுகளை கண்டித்து கருப்பு கொடிகள் பறந்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீரங்கத்தில் பெருமாள் அடிகளார்கள் போராட்டம்!

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
struggle at Trichy Srirangam

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் அரங்கநாத சாமி திருக்கோவில் ஆரியப்படாள் வாசல்  அருகே  கம்பத்தடி ஆஞ்சநேயர் சிலை உள்ளது. பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானதாக கூறப்படும் இச்சிலை கடந்த 2015 ஆம் ஆண்டு கோவில் நிர்வாகத்தால் நகர்த்தி வைக்கப்பட்டது. இதற்கு திருமால் அடியார் குழாம் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றது.

இந்த நிலையில் இன்று காலை கம்பத்தடி ஆஞ்சநேயர் சிலை அருகே 300-க்கும் மேற்பட்ட பெருமாள் அடியார் குழாமினர், அதன் ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தலைமையில் பெருமாள் பண்ணிசைத்து போராட்டத்தில்  ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் போலீசார் அவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆயினும் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

Next Story

“அனைவரும் ஒன்றுபட வேண்டும்” - விவசாயிகளுக்கு ஆதரவாக காலா பட நடிகர்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
nane patekar about farmers

இந்தி மற்றும் மராத்தியில் பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் நானா படேகர். கடைசியாக தி வேக்ஸின் வார் படத்தில் நடித்திருந்தார். தமிழில் ரஜினியின் காலா படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இப்போது ஜேர்னி (Journey) என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

திரைப்படங்களில் நடித்துக் கொண்டே மற்றொரு மராத்தி நடிகரான மகரந்த அனஸ்புரேவுடன் இணைந்து ‘நாம்’ என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இதன் மூலம் மகாராஷ்டிராவில் உள்ள வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். இந்த நிலையில், நாசிக்கில் நடைபெற்ற ஷேத்காரி சம்மேளன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், “விவசாயிகள் நல்ல நேரத்துக்காகக் காத்திருக்காமல் விடாமுயற்சியின் மூலம் நல்ல காலங்களைக் கொண்டு வர வேண்டும். 

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும் என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். தங்கம் விலை உயரும்போது, அரிசி விலை ஏன் உயரவில்லை? விவசாயிகள் முழு தேசத்திற்கும் உணவு வழங்குகிறார்கள். ஆனால் அவர்களின் குறைகளை தீர்க்க அரசுக்கு நேரமில்லை. இதுபோன்ற அரசிடம் விவசாயிகள் எதையும் கோர வேண்டாம். எந்த மாதிரியான இலட்சியத்தை இளம் தலைமுறைக்கு முன் வைக்கிறீர்கள்? நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நான் வெளிப்படையாக பேசும் நபர் என்பதால் என்னால் அரசியலில் சேர முடியாது. தற்போதைய நிலையை மாற்ற நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்” என்றார்.