Skip to main content

ஊரக உள்ளாட்சிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல்... கூட்டணிகள் தொடருமா? உடையுமா?

Published on 13/09/2021 | Edited on 13/09/2021

 

election

 

நீண்ட மாதங்களாக நிலுவையில் இருந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அடுத்த அக்டோபர் மாதம் 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதற்கான தேதிகளை மாநில தேர்தல் ஆணையத்தின் ஆணையர் பழனிகுமார் அறிவித்திருக்கிறார்.

 

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தென்காசி, நெல்லை ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் நிலுவையில் இருந்து வந்தது. திமுக ஆட்சி வந்ததும் இதற்கான தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் வேகம் காட்டியது மாநில தேர்தல் ஆணையம். ஏற்கனவே செப்டம்பர் 15-க்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்திருந்த நிலையில்,  சட்டமன்ற கூட்டம் நடந்து வந்ததால் தேர்தல் தேதியை அறிவிக்காமல் காத்திருந்தது ஆணையம்.

 

சட்டமன்ற கூட்டம் இன்று (13.9.21) மதியத்தோடு முடிவடையும் நிலையில், மாலை 5 மணிக்கு தேர்தல் தேதியை அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று மாலை 5 மணிக்கு பத்திரிகையாளர்களை சந்தித்த ஆணையர் பழனிகுமார், தேர்தல் தேதியை அறிவித்தார்.

 

Local elections for 9 districts - Voter list released!

 

அதன்படி, 9 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சிகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் துவக்கம் : செப்டம்பர் 15 , வேட்புமனுத்தாக்கல் முடிவு : செப்டம்பர் 22 , வேட்புமனு பரிசீலனை : செப்டம்பர் 23 ,  வேட்புமனுவை திரும்ப பெற கடைசி நாள் : செப்டம்பர் 25 , முதல்கட்ட தேர்தல் தேதி : அக்டோபர் 6 , இரண்டாம் கட்ட தேர்தல் தேதி : அக்டோபர் 9 , வாக்கு  எண்ணிக்கை : அக்டோபர் 12 -என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. பணியாளர் பற்றாக்குறை மற்றும் நிர்வாகக் காரணங்களால் இந்த தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்துகிறது ஆணையம்.

 

தேர்தல் நடக்கும் 9 மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. அக்டோபர் 16-ந்தேதி வரை நடத்தை விதிகள் அமலில் இருக்கும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், திமுக, அதிமுக கட்சிகளிலும், அதன் கூட்டணி கட்சிகளிலும் தேர்தல் ஜூரம் பற்றிக் கொண்டிருக்கிறது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது உருவான கூட்டணிகள் அப்படியே தொடருமா? அல்லது உடையுமா? என்பது ஓரிரு நாளில் தெரிய வரும். ஏனெனில், கூட்டணி கட்சிகள் அனைத்துமே கௌரவமான இடங்களில் போட்டியிட துடிக்கின்றன என்பதுதான்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.