Skip to main content

இடைத்தேர்தலில் தோல்வி... திமுக தலைவருக்கு தப்பான ஐடியா தந்தாரா முக்கிய பிரமுகர் ?

Published on 01/11/2019 | Edited on 01/11/2019

சமீபத்தில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகள் இடைத்தேர்தலில் திமுக கூட்டணியை தோற்கடித்துள்ளது அதிமுக கூட்டணி. இரண்டு தொகுதிகளும்மே எதிர்கட்சியிடம் இருந்த தொகுதிகள், தற்போது ஆளும்கட்சியிடம் சென்றுள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு அதிமுக, திமுக முதுகில் சவாரி செய்யப்பட்ட கட்சி. தற்போது தங்களது கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி, அது வலிமையாகவுள்ள தொகுதியில் தோற்றதால் திமுகவினரை அதிருப்தியடைய வைக்கவில்லை. விக்கிரவாண்டி தொகுதி தோல்வி திமுகவின் ஒரு பகுதியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
 

election loss


இதுப்பற்றி நம்மிடம் பேசிய திமுகவினர். விழுப்புரம் மாவட்டம் என்பது வன்னியர்களும் – ஓடுக்கிவைக்கப்பட்டுள்ள சாதி மக்களும் பெரும்பான்மையாக வாழும் மாவட்டம். இந்த மாவட்டத்துக்குள் வருவது தான் விக்கிரவாண்டி. இந்த விக்கிரவாண்டியில் பெரும் பலமாக வன்னியர்கள் இருந்தார்கள். இந்த தொகுதியில் வன்னிய சாதி மக்களுக்காக கட்சி நடத்தும் பாமக பலமாகவுள்ளது.

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின்போது பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த பாமக இந்த தொகுதியில் வாங்கிய ஓட்டுகள் 40 ஆயிரம் சொச்சம். திமுக வேட்பாளர் ராதாமணி வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக இருந்தவர் மரணத்தால் தான் இந்த இடைத்தேர்தல் நடைபெற்றது. திமுக வெற்றி  பெற்றுயிருந்த தொகுதியில் தற்போது திமுக தோல்வியை தழுவியதற்கு காரணம் சாதி தான்.

இந்த தொகுதிக்கான இடைத்தேர்தலை திமுக அதிமுக மோதலாக்காமல், திமுக பாமக மோதலாக்கியது அதிமுக. தேர்தல் நேரத்தில் திமுக பாமக தலைவர்களுக்கு இடையே நடைபெற்ற அறிக்கை யுத்தம், வார்த்தை யுத்தம் என நடத்திக்கொண்டுயிருந்தது. அதிமுக கச்சிதமாக தேர்தல் வேலையை பார்த்தது. திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகளின் வாக்குகளை கூட தங்கள் பக்கம் திருப்பிக்கொண்டது. அதற்கு திமுக முன்வைத்த வன்னியர் சமுதாயத்திற்கு பிற்காலத்தில் தரப்போகும் சலுகைகள், ஆட்சியில் இருந்தபோது தந்த இடஒதுக்கீடு போன்றவற்றை பட்டியலிட்டது.

இந்த மோதல் நடந்துக்கொண்டுயிருந்தபோது திமுக வன்னியர் கட்சி எனச்சொல்லி தலித் வாக்குகளையும், விடுதலை சிறுத்தைகள் வாக்குகளை வளைத்தது ஆளும்கட்சியான அதிமுக. அதேநேரத்தில் அதிமுக கூட்டணியில் உள்ள பாமக, திமுக வன்னியர் விரோத கட்சி. நம்மை ஏமாற்றுகிறது திமுகவுக்கு வாக்களிக்காதீர்கள் எனச்சொல்லி பிரச்சாரம் செய்தது. அதனால் தான் இந்த தொகுதியில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்றது. திமுக வேட்பாளர் புகழேந்தி வன்னிய சமுதாயத்தை சேர்ந்தவராக இருந்தும் வெற்றி பெற முடியாமல் போனதுக்கு காரணம், அதிமுக வின் தெளிவாக தேர்தல் யுக்தி.
 

election loss


சாதாரண இடைத்தேர்தலுக்கு, களத்தில் சாதியை இழுத்துயிருக்க தேவையில்லை. வன்னியர் வாக்குகள் தான் வெற்றியை தீர்மானிக்கும் எனச்சொல்லி திமுக தலைவர் ஸ்டாலின் மனதை மாத்தி தேர்தல் பொறுப்பாளர்கள் சிலர், ஸ்டாலினிடம் அறிக்கை வெளியிட வைத்தார்கள். அந்த அறிக்கைகள், பேச்சுகள் அந்த சாதியிலும் எடுப்படவில்லை, கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகளும் அதனை விரும்பவில்லை, அதனை அதிமுக பயன்படுத்திக்கொண்டது என்கிறார்கள் தேர்தல் களத்தில் உழைத்த பிறமாவட்ட கட்சி சீனியர்கள்.

அவர்களே தொடர்ந்து, சாதி சார்ந்து அறிக்கை யுத்தம் நடத்த திமுக தலைவருக்கு ஐடியாவை தந்தது, கட்சியில் நான்தான் முக்கிய பிரமுகர் என காட்டிக்கொள்பவர் தான் என்கிறார்கள். தோல்விக்கு பின் அவர் மீது கடும் அதிருப்தியில் உள்ளதாம் தலைமை. அவர் மீது கோபத்தை காட்ட சில நாட்களாக அறிவாலயம் பக்கம்மோ, திமுக தலைவர் வீட்டு பக்கம் கூட போகாமல் பதுங்கிக்கொண்டுள்ளார் என்கிறார்கள் கட்சியின் உள் விவரம் அறிந்தவர்கள்.

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.