Advertisment

தேர்தல் தோல்வி குறித்து தமிழக பாஜக ஆலோசனை (படங்கள்)

2019 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இணைந்தது. கன்னியாகுமரி, சிவகங்கை, கோவை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது. கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன், சிவகங்கையில் எச்.ராஜா, கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணன், ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்திரன், தூத்துக்குடியில் தமிழிசை சௌந்திரராஜன் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேனி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரும், துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகனுமான ஓ.ரவீந்திரநாத் குமார் மட்டும் வெற்றி பெற்றார். மற்ற 37 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

Advertisment

அகில இந்திய அளவில் பாஜக 300க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றியது. தமிழகத்தில் மட்டும் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து விவாதிப்பதற்காக சென்னையில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் தமிழக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் தமிழிசை சௌந்திரராஜன், முரளிதர ராவ், பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், எச்.ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisment
pictures Consulting Tamil Nadu failure Election
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe