Skip to main content

தேர்தல் தோல்வி... புகார்களை டெல்லிக்கு அனுப்பும் முயற்சியில் ஏ.சி.எஸ்.?

Published on 09/08/2019 | Edited on 09/08/2019

 

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி அமோக வெற்றி (தேனி தவிர) பெற்றிருந்த சூழலில், தள்ளிவைக்கப்பட்டு ஒரு இடைத்தேர்தல் போல நடந்த வேலூர் தேர்தலில், ஏ.சி.சண்முகத்தை தவிர வேறு யாராக இருந்தாலும் போட்டியிலிருந்து விலகியிருப்பார். ஆனால், ஏ.சி.சண்முகமோ, 'திமுகவை என்னால் வீழ்த்தமுடியும்; என்னால் மட்டுமே வீழ்த்த முடியும் ' என சொல்லி போட்டியிலிருந்து விலகாமல் திமுகவை எதிர்த்து களமிறங்கினார். 


 

 

அதுவும் திமுகவின் அரசியல் ஜாம்பவான்களில் ஒருவரான துரைமுருகனின் மகனை எதிர்த்து களமிறங்க ஒரு துணிச்சல் வேண்டும். திமுகவை எதிர்த்துப் போட்டியிட்ட ஏ.சி.எஸ்., மயிரிழையில் தோல்வியை சந்தித்திருக்கிறார். இந்த தோல்வி அவரை மனதளவில் பலகீனப்படுத்தியுள்ளது என்கிறார்கள் அவருக்காக தேர்தல் களப்பணியில் இருந்த அதிமுகவினர். 

 

ac shanmugam


 

இது குறித்து நம்மிடம் பேசிய அவர்கள், "தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சில நாட்களிலே டெல்லிக்கு சில தகவல்களை அனுப்பியிருந்தார் ஏ.சி.எஸ்.! குறிப்பாக,  'எடப்பாடியும் துரைமுருகனும் கைக்கோர்த்திருக்கிறார்கள். வேலுரில் திமுக ஜெயிக்க அதிமுக உதவவேண்டும். அதற்கு பிரதிபலனாக நாங்குநேரி-விக்கிரவண்டி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிக்கு திமுக உதவ வேண்டும்' என பரஸ்பரம் எழுதப்படாத ஒரு ஒப்பந்தத்தை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதனால், நீங்கள் தான்(டெல்லி) அதிமுக தலைமையிடம் பேச வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார். 


 

 

இதனையடுத்து, ஓபிஎஸ்சை டெல்லிக்கு வரவழைத்து கண்டித்ததுடன் ஏ.சி.எஸ்.சின் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும். திமுகவுடன் ரகசிய உறவை வைத்துள்ள எடப்பாடியின் நடவடிக்கைகளை நாங்கள் அறிவோம்' என எச்சரித்திருந்தார் அமித்ஷா. இதனை தொடர்ந்தே ஏ.சி.எஸ்.சின் வெற்றியில் வேகம் காட்டினார் எடப்பாடி. அதெல்லாம் 'சும்மா' என தேர்தல் முடிவுகள் காட்டிவிட்டது என நினைக்கிறார் ஏ.சி.எஸ்.! இந்த நிலையில் அப்-செட்டாகியிருக்கும் ஏ.சி.சண்முகம், அதிமுகவுக்கு எதிரான தனது ஆதங்கத்தை டெல்லிக்கு தெரியப்படுத்தும் முயற்சியில் இருக்கிறார்" என சுட்டிக்காட்டுகிறார்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தேர்தல் பறக்கும் படை கலைப்பு; எல்லையில் மட்டும் கண்காணிப்பு

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Dissolution of Election Flying Corps; Surveillance only at the border

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகளின்படி ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கு தலா 3 பறக்கும் படைகள் வீதம் 8 சட்டசபை தொகுதிக்கும்,  24 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. இது தவிர ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கூடுதலாக ஒரு பறக்கும் படை குழு இயங்கியது. இது தவிர வீடியோ கண்காணிப்புக் குழு, நிலை கண்காணிப்புக் குழு, பார்வையாளர்கள் உள்ளிட்டோருக்கு தனியாக குழு என 144 குழுக்கள் செயல்பட்டன.

ஓட்டு பதிவு நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்ததால் நேற்று காலை முதல் பறக்கும் படை, வீடியோ கண்காணிப்பு குழு, நிலை கண்காணிப்புக் குழு ஆகியவற்றை தேர்தல் ஆணையம் கலைத்து உத்தரவிட்டது. அதன்படி ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, கோபி , பவானி சட்டசபை தொகுதிகளில் குழுக்கள் கலைக்கப்பட்டன.

அதேசமயம் பவானிசாகர் தொகுதிக்குட்பட்ட தாளவாடி, அந்தியூர் தொகுதிக்குட்பட்ட பர்கூர் ஆகியவை கர்நாடகா மாநிலத்தை ஒட்டி உள்ளது. கர்நாடகாவில் இன்னும் தேர்தல் முடியாததால் மாநில எல்லையை கண்காணிக்கும் வகையில் அந்தியூர் தொகுதியில் 3 பறக்கும் படை, பவானிசாகர் தொகுதியில் மூன்று பறக்கும் படையினர் மற்றும் எல்லை பகுதியில் சோதனை, வாகன சோதனையில் ஈடுபடுவார்கள் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.