ADVERTISEMENT

வடசென்னை தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளர் தேர்தல் பிரச்சாரம் (படங்கள்)

04:59 PM Apr 01, 2024 | mathi23

ADVERTISEMENT

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதன் பிறகு, ஒவ்வொரு கட்டங்களாக பல்வேறு மாநிலங்களில் ஜூன் 1ஆம் தேதி வரை மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. நாடு முழுவதும் நடைபெறும் வாக்குப்பதிவுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, இன்று (01-04-24) சென்னை கொடுங்கையூர் திருத்தங்கல் நாடார் கல்லூரி பகுதியில் அ.தி.மு.க சார்பில் வடசென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர். ஆர். மனோகரன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT