Skip to main content

“கல்வித்துறை அமைச்சர் நண்பருடன் டைம் ஸ்பென்ட் பண்ணுவதோடு  இதையும் கவனிக்க வேண்டும்” - வானதி சீனிவாசன் காட்டம்

Published on 15/03/2023 | Edited on 15/03/2023

 

"Education Minister should spend time with a friend and pay attention to this" - Vanathi Srinivasan Kattam

 

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசுகையில், ''எங்கள் கட்சியிலும் மாற்றுக் கட்சியிலிருந்து நிறைய பேர் வந்து இணைந்து கொண்டிருக்கிறார்கள். பாஜகவிலிருந்து எந்த ஒரு நிர்வாகி போனாலும் அது மிகப்பெரிய விவாதமாக ஆகிக்கொண்டிருக்கிறது. எந்த ஒரு சாதாரண தொண்டனும் இந்த கட்சியை விட்டுப் போகக்கூடாது என்று நாங்கள் நினைக்கிறோம். ஜனநாயகத்தில் அதுவும் குறிப்பாக தேர்தலில் எண்ணிக்கை என்பது மிக மிக முக்கியம். எனவே ஒரு தொண்டன் கூட இந்த கட்சியை விட்டுப் போனால் நாங்கள் நிச்சயமாக அதைப்பற்றிப் பார்க்க வேண்டும். அப்படி போகக்கூடாது என்பது எங்களுடைய விருப்பம். அதற்கான எல்லா விஷயங்களையும் நாங்கள் கவனிப்போம். எந்த காரணத்தால் அவர்கள் போகிறார்கள், என்ன பிரச்சனை இருக்கிறது என்று ஆய்வு செய்வோம். ஆனால் சிலர் தனிப்பட்ட அரசியல் ஆசை காரணமாக, தனிப்பட்ட கொள்கைகளுக்காக செல்கின்ற போது எதுவும் செய்ய முடியாது. பாஜக மிகப்பெரிய கோட்டையாக இருக்க வேண்டும். அதில் உள்ளே வருபவர்கள் தான் இருக்க வேண்டும் வெளியே செல்லக்கூடாது என்பது எங்களுடைய கருத்து'' என்றார்.

 

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழித்தேர்வை 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதாமல் தவிர்த்துள்ளது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த வானதி ஸ்ரீனிவாசன், “தமிழகம் கல்வியிலேயே முன்னேறிய மாநிலம். அதிலும் குறிப்பாக உயர் கல்வியில் முதலிடத்தில் இருக்கின்ற மாநிலம் என்று சொல்கிறோம். உயர் கல்விக்கு செல்ல வேண்டும் என்றால் பன்னிரண்டாம் வகுப்பை தாண்டி செல்ல வேண்டும். தேர்வு எழுதி தோல்வியடைந்து அல்லது தேர்வு எழுதிவிட்டு வேறு வேலை வாய்ப்புகளுக்கு செல்வதற்காக கல்லூரி செல்லாமல் இருக்கிறார்கள் என்பது வேறு விஷயம். ஆனால் தேர்வு எழுதுவதற்கு பதிவு செய்துவிட்டு இத்தனை ஆயிரம் பேர்  தேர்வு எழுதவில்லை என்றால் அரசாங்கம் இதை ரொம்ப தீவிரமாக யோசிக்க வேண்டும். ஏனென்றால் தமிழகத்தினுடைய கல்வி என்பது ஒரு நல்ல நிலையில் இருந்தாலும் கூட இன்றைக்கு அரசுப் பள்ளியில் சேரக்கூடிய மாணவர்கள் விகிதம் குறைந்துள்ளது.

 

அரசுப் பள்ளிகளில் நல்ல மைதானம் இருக்கிறது. ஆசிரியர்கள் இருக்கிறார்கள், ஆசிரியர்களுக்கு நல்ல சம்பளம் இருக்கிறது. இலவசமாக லேப்டாப், புது சைக்கிள், யூனிஃபார்ம், புத்தகம், உணவு எல்லாம் இருக்கிறது. இதையும் தாண்டி ஏன் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர மறுக்கிறார்கள். இது கவலை அளிக்கக் கூடிய விஷயம். அதனால் கல்வித்துறை அமைச்சர் அவருடைய நண்பர் சினிமாவில் நடிக்கலாம் அமைச்சராக இருக்கலாம் அவர்களோடு சேர்ந்து நீங்கள் டைம் ஸ்பென்ட் பண்ணுங்க. பிரண்ட்ஷிப்புக்கு எதையும் சொல்லவில்லை. கல்வித்துறை அமைச்சர் இதையும் கவனிக்க வேண்டும்.” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.