Edappadi Palaniswami presided over the meeting of district secretaries

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (09.01.2024) காலை 10.30 மணிக்கு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத்தேர்தலுக்குத்தயாராகும் வகையில் தேர்தல் உத்திகள் வகுப்பது, பூத் கமிட்டி அமைப்பது, இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை அமைப்புகளின் களப்பணி குறித்தும், கட்சியைப் பலப்படுத்துவதற்கான பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 26 ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.