Skip to main content

எடப்பாடியை மிரட்டும் எச்.ராஜா!

Published on 19/12/2018 | Edited on 19/12/2018
h.raja


 

 

பாஜகவின் வாசனை வந்தாலே அவர்களுடன் மோதமாட்டார் எடப்பாடி. ஆனால், பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜாவுடன் இப்பொழுது மோதிக்கொண்டிருக்கிறார். இந்த எச்.ராஜா VS எடப்பாடி மோதல் உச்சக்கட்டத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது.
 

 

தமிழகத்தில் உள்ள கோவில்களையெல்லாம் இந்து அறநிலையத்துறையின் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும், அவற்றை அந்தெந்த ஊர்களில் உள்ள இந்து பிரமுகர்களின் பராமரிப்பில் விட வேண்டும் என்பது பாஜகவின் தேசிய செயலாளரான எச்.ராஜாவின் கருத்து. 

 

அதற்காக இந்து சமய அறநிலையத்துறைக்கும், சிலை கடத்தல் விவகாரத்தை விசாரிக்கும் அதிகாரியான பொன்.மாணிக்கவேலுக்கும் இடையே நடக்கும் மோதலை எச்.ராஜா பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தார்.
 

 

தொடர்ச்சியாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை சிலை கடத்தல் பிரிவு போலீசார், கைது செய்வதை நிறுத்த நினைத்த எடப்பாடி பிறப்பித்த உத்தரவுகளை பொன்.மாணிக்கவேல் மீறினார். அதனால் பொன்.மாணிக்கவேலுவுக்கும் எடப்பாடிக்கும் மோதல் உருவானது. அதை கோர்ட் உதவியுடன் முறியடித்தார் பொன்.மாணிக்கவேல். 

 

இந்த விவகாரத்தில் பொன்.மாணிக்கவேலுக்கு ஆதரவாக எச்.ராஜா முழக்க மிட்டார். இதனால் கடுப்படைந்த எடப்பாடி, சிலை கடத்தல் பிரிவில் வேலை பார்க்கும் பொன்.மாணிக்கவேலுக்கு மிக நெருக்கமான இளங்கோ என்கிற டி.எஸ்.பி. உள்பட 20க்கும் மேற்பட்ட அதிகாரிகளை பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக காவல்துறை டி.ஜி.பி.யிடம் புகார் அளிக்க வைத்துள்ளார்.

 

இதுவரை 24 வழக்குகள் பொன்.மாணிக்கவேல் மேற்பார்வையில் சிலை கடத்தல் துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு வழக்கில் கூட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. எல்லாம் விளம்பரத்திற்காகவும் செய்திகளில் அடிபடுவதற்காகவும் பொன்.மாணிக்கவேல் செய்யும் வேலை என பரபரப்பான புகாரை கொடுத்துள்ளனர். 

 

அத்துடன் பொன்.மாணிக்கவேலுவுக்கு கீழ் வேலை செய்யும் 60 பேரை அதிரடியாக இடமாற்றம் செய்தும் உத்தரவிட்டுள்ளது காவல்துறை. இதை நான் விடமாட்டேன். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என எச்.ராஜா டிஜிபியிடம் ஆவேசமாக பொங்கியுள்ளார்.

 

 

அவர் எங்க வேணுமானாலும் போகட்டும், எச்.ராஜாவின் பேச்சை கண்டுகொள்ளாதீர்கள் என எடப்பாடி உத்தரவிட்டுள்ளார் என்கிறது கோட்டை வட்டாரங்கள். 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

களத்தில் குதித்த 5 ஓ.பி.எஸ்.கள்- எடப்பாடி தரப்புக்கு கிடைத்த கிரீன் சிக்னல் 

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
5 OPSs that jumped into the field – a green signal for the Edappadi side

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி இந்தியத் தேர்தல் ஆணையத்தில் ஓ. பன்னீர்செல்வம் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “தனது தலைமையிலான அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும். அவ்வாறு தனது அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்காவிடில் அச்சின்னத்தை முடக்க வேண்டும். மேலும் இரட்டை இலை சின்னத்தை முடக்கும் பட்சத்தில் அதற்குப் பதிலாகத் தனது அணிக்கு வாளி சின்னத்தை ஒதுக்க வேண்டும். அதே சமயம் மக்களவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை சிலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஓபிஎஸ் தரப்புக்கு தேர்தல் ஆணையம் அளித்துள்ள பதிலில், இரட்டை இலை சின்னத்தை முடக்க முடியாது. எங்களிடம் உள்ள ஆவணத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என உள்ளது' எனத் தெரிவித்துள்ளது. இதனால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தடையில்லை என க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளது தேர்தல் ஆணையம். அதேநேரம் ஓபிஎஸ் சுயேச்சையாக போட்டியிடும் ராமநாதபுரம் தொகுதியில் 5 பேர் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், ஓபிஎஸ்-இன் இந்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது ஓபிஎஸ் தரப்புக்கு மேலும் ஒரு சரிவைக் கொடுத்துள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Next Story

திருச்சி தொகுதி அதிமுக சீட் யாருக்கு? - உச்சத்தில் விஜயபாஸ்கர் - தங்கமணி மோதல்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024

 

Trichy Constituency ADMK seat for whom? Vijayabaskar - Thangamani conflict at the peak!

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதிமுக கூட்டணியில் திருச்சி தொகுதி யாருக்கு என்ற முட்டல் மோதல்கள் பலமாக உள்ளதாம். தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்றச் சங்கம் ஆர்.வி. பரதன், தனக்கு திருச்சி அல்லது பெரம்பலூர் தொகுதி கொடுத்தால் தமிழ்நாடு முழுவதும் எங்கள் ஆட்கள் கட்சிக்காக வேலை செய்வார்கள் என்று எடப்பாடி கே. பழனிசாமியிடம் கோரிக்கையோடு போக, திருச்சி தொகுதிப் பொறுப்பாளரான மாஜி தங்கமணியும் ஆமோதித்துள்ளார். ஆனால் திருச்சி தொகுதியை கறம்பக்குடி குளந்திரான்பட்டு மணல் கரிகாலனின் சகோதரரான புதுக்கோட்டை மாவட்ட அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் கருப்பையாவுக்கே கொடுக்க வேண்டும் என்று புதுக்கோட்டை வடக்கு மா.செ. விஜயபாஸ்கர் மதியம் வரை எடப்பாடியிடம் வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் தான், திருச்சியை தங்கள் கூட்டணியில் உள்ள தேமுதிகவுக்கு ஒதுக்குவது வரை போன எடப்பாடி, தேமுதிகவுக்கு தஞ்சை தொகுதியை கொடுத்துவிட்டு திருச்சியை நிலுவையில் வைத்துள்ளார். தொகுதிப் பொறுப்பாளரான தான் பரிந்துரை செய்த வேட்பாளருக்கு சீட் கிடைக்கவிடாமல் தான் பரிந்துரைக்கும் பாசறை கருப்பையாவுக்கு சீட் வாங்க மோதும் விராலிமலை விஜயபாஸ்கரிடம், உங்கள் பொறுப்பு தொகுதியை மட்டும் கவனியுங்கள். என் பொறுப்பு தொகுதிக்குள் வரவேண்டாம் என்று தங்கமணி விராலிமலை விஜயபாஸ்கரிடம் பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது.

திருச்சி தொகுதி சீட்டுக்காக அதிமுக மாஜிக்களின் மோதல்கள் உச்சத்தில் இருப்பதால் விடியும்போது சீட் யாருக்கு என்று முடிவெடுப்பார் எடப்பாடி என்கிறார்கள் விவரமறிந்த ர.ர.க்கள். பரதனிடம் பேசிய எடப்பாடி, நாளைய விடியல் நல்லதாக இருக்கும் என்ற நம்பிக்கை கூறி இருப்பதாகவும் பேசுகின்றனர். அதே நேரத்தில் மா.செ. விஜயபாஸ்கர், சீட் எனக்குத்தான் வாங்கித் தருவார் நான் தான் வேட்பாளர் என்று கட்சியினரிடம் சொல்லி வாழ்த்துகளையும் பெற்று வருகிறார் பாசறை கருப்பையா.