Skip to main content

எடப்பாடி பழனிசாமி அணி வேட்பாளர் அறிவிப்பு; உற்சாகத்தில் ஆதரவாளர்கள்

Published on 01/02/2023 | Edited on 01/02/2023

 

edappadi palanisamy team erode by election candidate announced 

 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்புக்கு பிறகு ஒருவிதப் பதற்றத்தோடு இருந்த எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அதிமுகவோடு கூட்டணியில் இருந்த த.மா.காவை தவிர பல கட்சிகள் ஆதரவு தராத நிலையில், பிரதான கூட்டணிக் கட்சியான பாரதிய ஜனதா கட்சி இந்த தேர்தலில் என்ன நிலைப்பாடு என்று வெளிப்படையாகக் கூறாமல் மறைமுகமாக ஒருபுறம் ஓபிஎஸ் அணி, மறுபுறம் ஈபிஎஸ் அணி என பேச்சுவார்த்தையில் மட்டுமே ஈடுபட்டு வந்தது.

 

இந்த நிலையில் ஏதாவது ஒரு முடிவை சொல்லுங்கள் என எடப்பாடி காத்துக்கொண்டே இருந்தார். மற்றொரு பிரச்சனையாக சின்னம் கிடைப்பதும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் வேட்பாளர் தேர்வு பிரச்சனையும் பெரிதாக இருந்தது. முதலில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கத்தை தேர்தலில் போட்டியிடுங்கள் என எடப்பாடி கேட்டுக்கொண்டாராம். ஆனால் அவர் பின் வாங்க, தற்போது அறிவித்துள்ள வேட்பாளரான தென்னரசுவும் ஒரு கட்டத்தில் எனக்கு தேர்தலில் நிற்கும் ஆசை இல்லை என எடப்பாடியிடம் கூறியதாக தெரிவிக்கின்றனர்.

 

இதற்கெல்லாம் முக்கிய காரணம் அவர்களே செலவு செய்ய வேண்டும் என முதலில் கூறப்பட்டதாம். பிறகு அனைத்து செலவுகளையும் தானே ஏற்றுக் கொள்வதாக அறிவித்து தென்னரசுவை சமாதானப்படுத்தி வேட்பாளராக அறிவித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. தற்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தென்னரசு 2001 முதல் 2006 வரை, அடுத்தாக 2016 முதல் 2021 வரை என இரண்டு முறை இந்த தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தவர். அதிமுகவில் ஒரு எளிய மனிதராக இருப்பவர் தென்னரசு. ஒரு வழியாக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுவிட்டார் என அதிமுக எடப்பாடி அணியினர் உற்சாகமாக உள்ளார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.