Advertisment

மாறி மாறி பேசி வருகிறார் எடப்பாடி பழனிசாமி: டி.டி.வி. தினகரன்

edappadi palanisamy T. T. V. Dhinakaran

Advertisment

சேலம் 8 வழிச் சாலை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாம மாறி மாறி பேசி வருகிறார் என்று டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன்,

சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது மத்திய அரசிடம் போராடி எட்டு வழிச் சாலை திட்டத்தை பெற்றோம் என்றார். மூன்று நாட்களுக்கு முன்பாக சேலத்தில் பேசும்போது எட்டு வழிச் சாலை திட்டம் மத்திய அரசின் திட்டம். நிலத்தை ஆர்ஜிதம் செய்து கொடுப்பது மட்டுமே எங்கள் வேலை என்று மாறி மாறி பேசிவருகிறார்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

மக்களின் கோரிக்கைகளையும், எண்ணத்தையும் வெளிப்படுத்தும் விதமாக 6ஆம் தேதி திருவண்ணாமலையில் கண்டன ஆர்ப்பாட்டம் வைத்துள்ளோம். அரூரில் நடைபெறவிருந்த போராட்டத்திற்கு அனுமதி தரவில்லை. எனவே நீதிமன்றத்தை அணுகியுள்ளோம். அதிலும் எங்களுக்கு ஒரு தேதி நீதிமன்றம் தரும். நிச்சயம் அந்த தேதியில் அரூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

தமிழகத்தில் மக்களாட்சியே நடைபெறவில்லை. கொடுங்கோல் ஆட்சி தான் நடைபெறுகிறது.என்றுதான் எல்லா இடத்திலும் மக்கள் பேசுகிறார்கள். நிச்சயம் மக்களின் எண்ணங்கள் நிறைவேறும். இந்த ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.

Edappadi Palanisamy T. T. V. Dhinakaran
இதையும் படியுங்கள்
Subscribe