Skip to main content

அ.தி.மு.க.வின் தற்காலிக பொதுச்செயலாளராக இ.பி.எஸ் தேர்வு...(படங்கள்)

Published on 11/07/2022 | Edited on 11/07/2022

 

சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் இன்று (11/07/2022) காலை 09.00 மணிக்கு அ.தி.மு.க.வின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் துவங்கியது. அதில் 16 தீர்மானங்களை நிறைவேற்ற செயற்குழுவில் ஒப்புதல் தரப்பட்டது. இதைத் தொடர்ந்து, செயற்குழு கூட்டம் நிறைவடைந்தது. இதையடுத்து, அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பொதுச்செயலாளர் பொறுப்பிற்கான தேர்தல் அறிவிப்பு மற்றும் தேர்தல் அதிகாரிகளை நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

 

எடப்பாடி பழனிசாமியைக் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராகப் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுச்செயலாளரால் நியமிக்கப்படும் பொறுப்பாளர்கள் பொதுச்செயலாளரின் பதவிக்காலம் வரை நீடிப்பார்கள் என்றும் அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்