சென்னை மாநில கல்லூரில் நடைபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான விளையாட்டு போட்டிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
இந்த தொடக்க விழாவில், வெள்ளை பேண்ட், வெள்ளை சட்டையுடன் முதல்வா் பழனிசாமி கிரிக்கெட் விளையாடினார். அமைச்சர் ஜெயகுமார் பந்து வீச, எடப்பாடி பழனிச்சாமி அதை எதிர்கொண்டு பேட்டிங் செய்தார். இதை ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உற்சாகத்துடன் பார்த்தனர்.