Skip to main content

எங்களை குறை சொல்வது தான் எதிர்க்கட்சி தலைவருக்கு வேலை: எடப்பாடி பழனிசாமி 

Published on 12/09/2019 | Edited on 12/09/2019
edappadi palanisamy



கோவை விமான நிலையத்தில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 
 

என்னுடைய வெளிநாட்டு சுற்றுப்பயணம் குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்கும் மு.க.ஸ்டாலின் அவரது ஆட்சிக்காலத்தில் எத்தனை முறை வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தார். எவ்வளவு வெளிநாட்டு முதலீடு ஈர்த்து உள்ளார். அவர் சொல்வது எல்லாம் பொய்யான செய்தி. தி.மு.க. ஆட்சி காலத்தில் 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை ரூ.26 ஆயிரம் கோடி தான் தமிழகத்தில் தொழில் முதலீடு வந்தது.
 

ஆனால் ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த காலத்தில் 2015-ம் ஆண்டில் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடி தொழில் முதலீட்டை ஈர்த்து, அதன் மூலம் ரூ.73 ஆயிரம் கோடிக்கு தொழில் தொடங்கப்பட்டுள்ளது. 67 நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கு முன்வந்துள்ளது. ஒரு புரிந்துணர்வு போட்டால் உடனே அந்த திட்டத்தை தொடங்கி விட முடியாது. அந்த தொழிற்சாலைக்கு தேவையான நிலத்தை கையகப்படுத்த வேண்டும். அதற்கான நிதி ஆதாரத்தை திரட்ட வேண்டும், முழு பணத்தை வைத்துக் கொண்டு தொழில் செய்ய முடியாது. வங்கியில் கடன்பெற்று தான் செய்ய முடியும். 


 

அதன்படி பெரிய தொழில் செய்ய வேண்டுமென்றால் 5 அல்லது 6 ஆண்டுகள் ஆகி விடும். சிறிய தொழில் தொடங்க வேண்டுமென்றால்கூட 2 அல்லது 3 ஆண்டுகள் ஆகும். அதுகூட தெரியாமல் எதிர்க்கட்சி தலைவர் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார். நான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றது முதல் இன்று வரை எங்களை குறை சொல்வது தான் எதிர்க்கட்சி தலைவருக்கு வேலை.


 

தற்போதைய வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின்போது, தமிழகத்தில் சுமார் 8 ஆயிரத்து 895 கோடி ரூபாய் தொழில் முதலீடு செய்வதற்கு தொழில் அதிபர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர். அது தொடர்பாக தொழில் அதிபர்கள் தொடர்ந்து என்னுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மு.க.ஸ்டாலின் பாராட்டு எங்களுக்கு தேவையில்லை. அவரது பாராட்டை வைத்துக் கொண்டா? இந்த அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. அவர் விமர்சனம் செய்யாமல் இருந்தாலே பாராட்டுக்குரியது தான். எனவே ஒரு திட்டத்தை தொடங்கும் போது உடனடியாக அதை நடைமுறைப்படுத்த முடியாது. அது அவருக்கு தெரியும். ஆனால் பாராட்டுவதற்கு அவருக்கு மனம் இல்லை என்றார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.