தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்பாளர்கள் இறுதிபட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டதை தொடர்ந்துகட்சியினரும், சுயேட்சை வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை ஆர்.கே.நகர். வைத்தியநாதன் மேம்பாலம் அருகில் அதிமுக இணை ஒருங்கினைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார். அதேபோல், அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எழும்பூர் இம்பீரியல் மஹாலில் பரப்புரை மேற்கொண்டார்.
அதிமுகவினருக்கு வாக்கு சேகரித்த எடப்பாடி பழனிசாமி! (படங்கள்)
Advertisment