முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு குடல் ரீதியிலான நோய் பல வருடமாகவே இருக்கிறது. சமீபத்தில் லண்டன் சென்ற அவர், அங்குள்ள மருத்துவமனையில் இரண்டு நாள் தங்கி குடலை poloniseope என்கிற கருவியைப் பயன்படுத்தி ஸ்கேன் செய்தார்.
அந்த நோய் தற்போது அதிகமாகிவிட்டது. முதலமைச்சர் வேட்பாளர் என எடப்பாடி அறிவிக்கப்பட்டவுடன் அவரது உடல்நிலை மற்றும் கிரகநிலை ஆகியவைப் பற்றி இலங்கையைச்சேர்ந்த ஜோதிடர் ஒருவரிடம் ஆலோசனை நடத்தியுள்ளார். அவர் நெகட்டிவ்வான பதில்களையே தந்துள்ளார்.
எடப்பாடியின் ஆஸ்தான ஜோதிடரான அவரின் பதில்கள் எடப்பாடியை சோர்வடைய செய்துள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.