Skip to main content

யாருமே அமைச்சராக இருக்க முடியாது: டெல்லியில் எடப்பாடி பழனிசாமி பேட்டி

Published on 08/10/2018 | Edited on 08/10/2018
narendra modi - Edappadi K. Palaniswami



பிரதமர் நரேந்திர மோடியை இன்று காலை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.
 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, 
 

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து அமைக்க வேண்டும் என்று பிரதமரிடம் கேட்டுக்கொண்டேன். பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைப்பது பற்றி தமிழக அரசு பரிசீலிக்கும். ஓசூர், நெய்வேலி, ராமநாதபுரத்துக்கு விமானப் போக்குவரத்து தொடங்கவும் கோரி உள்ளேன். தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரினேன். மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது. சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தினேன். சேலத்தில் ராணுவ தளவாட உற்பத்தி ஆலை அமைக்கவும் கோரி உள்ளேன். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்க கோரிக்கை வைத்துள்ளேன். உள்ளாட்சித்துறைகளுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்றும், கன்னியாகுமரியில் நிரந்தர கப்பல்படை தளம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளேன். காவிரி பாசன மேம்பாட்டுத் திட்டத்துக்கு நிதி ஒதுக்க கோரிக்கை வைத்ததோடு, மேகதாதுவில் கர்நாடகம் அணைகட்ட அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளேன். 
 


தமிழகத்தில் பல்வேறு அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் வந்துள்ளன. அதற்கு தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று உணர்வு வரவில்லையா?. 
 

யார் வேண்டுமானாலும் வழக்கு தொடரலாம். வழக்கின் உண்மைத் தன்மையை தெரிந்து கொள்ள வேண்டும். யார் பெட்டிசன் கொடுத்தாலும் பதவி விலக வேண்டும் என்றால், தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் யாருமே அமைச்சராக இருக்க முடியாது. 
 

மக்கள் மத்தியில் நம்பிக்கை இழந்துவிட்டீர்களே?
 

யார் மக்கள் மத்தியில் நம்பிக்கை இழந்துவிட்டது. நீங்கள் தவறான தகவலை சொல்லுகிறீர்கள். அண்மையில் கூட்டுறவு சங்கத் தேர்தல் நடைப்பெற்றது. அதில் 93 சதவீதம் வெற்றிப்பெற்றிருக்கிறோம். 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். மக்கள் செல்வாக்கு இழந்திருந்தால் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் தேந்தெடுக்கப்பட்டிருப்பார்களா? இது தவறான செய்தி. 
 

டிடிவி தினகரன் ஓ.பி.எஸ்ஸை சந்தித்தாக கூறியுள்ளார். அதற்கு ஓ.பி.எஸ். சந்தித்தது உண்மைதான் என்று கூறியிருக்கிறாரே? இவர்கள் சந்தித்தது உங்களுக்கு தெரியுமா? இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
 

டிடிவி தினகரன் ஊடகங்கள் வாயிலாக சில கருத்துக்களை தெரிவித்தார். அதற்கு துணை முதல் அமைச்சர் தெளிவான விளக்கத்தை ஊடங்களை அழைத்து தெரிவித்துவிட்டார். அதற்கு மேல் எதுவும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. 
 

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி ஏற்படுமா?
 

இன்னும் தேர்தலே அறிவிக்கப்படவில்லை. அறிவித்தப் பிறகு யார் யாருடன் கூட்டணி சேருகிறார்கள், அதற்கு தக்கவாறு எங்கள் கட்சி முடிவு எடுக்கும். 
 

இடைத்தேர்தலை ஒத்திவைக்க காரணம் என்ன?
 

காரணத்தைத்தான் தெளிவாக சொல்லிவிட்டார்களே. இது தேர்தல் கமிஷன் முடிவு எடுக்க வேண்டியது. இது நாங்கள் முடிவு எடுப்பது அல்ல. இவ்வாறு கூறினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Next Story

“ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
issue of ration rice should be prevented says Edappadi Palaniswami

ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், ரேஷன் அரிசி கடத்தலுக்கு எதிராக செயல்பட்ட வழக்கறிஞர் வீட்டில் அரிசி கடத்தல் கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்ட ஆட்சியில் ஏற்கெனவே போதைப்புழக்கமும், அதுசார்ந்த குற்றங்களும் சர்வ சாதாரணம் ஆகிவிட்ட நிலையில், தற்போது வெடிகுண்டு கலாச்சாரமும் தலைவிரித்தாடுகிறது.

மேலும், தமிழ்நாட்டில் இருந்து ரேஷன் அரிசி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதும் இந்த ஆட்சியில் தொடர்கதையாகிவிட்டது. மாநிலத்தில் நடக்கும் எந்த விஷயத்திலும் கட்டுப்பாடு இல்லாத முதல்வராக இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரேஷன் கடத்தல் கும்பல் மீது துரிதமாக சட்ட நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழா வண்ணம் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்குமாறும், ஏழை எளிய மக்களின் பசியாற்றும் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுத்து நிறுத்துமாறும் முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.