Skip to main content

“எடப்பாடிக்கு இந்த வரலாறெல்லாம் தெரியாது; தமிழிசை, எல்.முருகனுக்கு வாய்ப்பிருக்கும்”-முதல்வர் மு.க. ஸ்டாலின் பேட்டி

Published on 12/06/2023 | Edited on 12/06/2023

 

"Edappadi does not know all this history; Tamilisai, L.Murugan will have a chance''-Tamil Chief Minister M.K.Stalin's interview

 

இன்று ஜூன் 12 ஆம் தேதி, மேட்டூர் அணையில் நீர்ப்பாசனத்திற்காகத் தமிழக முதல்வர் தண்ணீர் திறந்து வைத்தார். அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு ஆகியோர் உடனிருந்தனர்.

 

தற்பொழுது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.41 அடியிலிருந்து 103.35 கன அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 69.25 டி.எம்.சியாக உள்ளது. மேட்டூர் அணையிலிருந்து மின்நிலையம் வழியாக வினாடிக்கு 3,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இன்று மாலைக்குள் நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 10,000 கன அடி வரை நீர் திறப்பு அதிகரிக்கப்படும். 90வது முறையாக மேட்டூர் அணை பாசனத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது.

 

தொடர்ந்து நிகழ்வில் பேசிய முதல்வர், ''உரிய காலத்தில் அதாவது ஜூன் 12 ஆம் தேதி திறந்து வைப்பதிலே மிகுந்த மகிழ்ச்சி. டெல்டா மாவட்ட உழவர்கள் பாசனத்திற்கான நீரினை மிகுந்த சிக்கனமாக பயன்படுத்தி இடுபொருட்களை தேவையான அளவு உபயோகித்து  நடப்பு குறுவை பருவத்தில் நெல் விளைச்சலை அதிகப்படுத்த வேண்டும். நமது உழவர்களுக்கும் நடப்பாண்டில் ரூபாய் 75 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டத்தையும் இன்று நான் அறிவிக்கிறேன். 'குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் 2023' என்ற இந்த திட்டத்தின் கீழ் ஏக்கருக்கு 45 கிலோ யூரியா, 50 கிலோ டிஏபி, 25 கிலோ பொட்டாஸ் என்ற விகிதத்தில் 2.5 லட்சம் ஏக்கருக்கு தேவையான ரசாயன உரங்கள் முழு மானியத்துடனும், 1.2 லட்சம் ஏக்கருக்கு தேவையான நெல் விதைகள் 50 சதவீத மானியத்திலும், 1,518 ஏக்கருக்கு மாற்று சாகுபடி தொகுப்பு. 625 ஏக்கரில் பசுந்தாள் உர விதைகளும் மானியத்தில் வழங்குவதற்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எனவே இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு காவிரி டெல்டா உழவர்கள் அனைவரும் பாசன நீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்தி தேவையான ரசாயனத்தை பயன்படுத்தி நெல் சாகுபடி மேற்கொள்ளுமாறு நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.

 

பின்னர் செய்தியாளர்களுக்கு பதிலளித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், “திமுக ஆட்சியின்போது சென்னை கோயம்பேட்டில் ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையமாக அதை கட்டினோம். ஆனால் கட்டி முடித்து திறப்பு விழாவிற்கு முன்பு ஆட்சி மாற்றம் நடந்தது. ஜெயலலிதா அம்மையார் அவரது பெயரை வைத்துக் கொண்டு அதை திறந்து வைத்தார்கள். நாங்கள் அதற்கு கவலைப்படவில்லை. அதேபோல் தலைமைச் செயலகத்தை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் திமுக ஆட்சியில் தான் கட்டினோம். அதை ஆட்சிக்கு வந்ததும் அதிமுக என்ன செய்தது. அது அரசு மருத்துவமனையாக மாற்றி அரசியல் செய்தது. சென்னையில் இன்று ஓடிக்கொண்டிருக்கும் மெட்ரோ திட்டத்தை நாங்கள் தான் தொடங்கி வைத்தோம். கலைஞர் முதல்வராக இருந்த பொழுது நான் துணை முதல்வராக இருந்தேன்.

 

அப்பொழுது நானே ஜப்பான் நாட்டுக்கு போய் நிதி உதவி பெற்று, அதன் மூலமாக தான் மத்திய அரசினுடைய உதவியை பெற்று அதை நாம் தொடங்கி வைத்தோம். அன்னைக்கு அதை எதிர்த்தவர் மறைந்த ஜெயலலிதா. மெட்ரோவே தேவையில்லை என்று வெளிப்படையாகவே ஜெயலலிதா சொன்னார். ஆனால் திறப்பு விழாவின் போது அவர் பெயரை பொறித்த கல்வெட்டை திறந்து வைத்தார் அதேபோல் கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம். அதை கலைஞர் தான் கட்டி வைத்தார். ஆனால் அதிமுக ஆட்சி வந்த பிறகு அதை எப்படி எல்லாம் சீரழித்தார்கள் என்று உங்களுக்கு தெரியும். அதன் பிறகு நீதிமன்றத்திற்குச் சென்று வாதாடி போராடி நிலைநாட்டி இருக்கிறோம். இப்படி நீண்டு கொண்டே போகும். இந்த வரலாறுகள் எல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு தெரியாது என்று நினைக்கிறேன்.

 

"Edappadi does not know all this history; Tamilisai, L.Murugan will have a chance''-Tamil Chief Minister M.K.Stalin's interview

 

அதேபோல அம்மா உணவகம். அதை மூடி விடுவார்கள் மூடி விடுவார்கள் என்று திட்டமிட்டு பிரச்சாரம் செய்தார்கள். அதை இன்னும் மூடவில்லை தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் பள்ளிக்கூடத்துக்கு போகின்ற குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் புத்தகப் பையில் அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா படமும், பழனிசாமி படமும் போட்டு மாணவர்களுக்கு கொடுத்தார்கள். நாம் ஆட்சிக்கு வந்த நேரத்தில் அதில் கொஞ்சம் மீந்து போயிருந்தது. அந்த நேரத்தில் அரசு அதிகாரிகள் எல்லாம் என்னிடத்தில் வந்து கேட்டார்கள். இதை மாற்றி விடலாம் உங்கள் படத்தை போடலாம் என்று சொன்னார்கள். யார் படமும் போட வேண்டாம். இருக்கிற படமே இருக்கட்டும். இதனால் பல கோடி ரூபாய் இழப்பு வரும். அந்த இழப்பை அரசு ஏற்றுக் கொள்ளாது. எனவே அப்படியே இருக்கட்டும் என்று சொன்னவன் தான் நான். இதையெல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு நான் நினைவூட்ட கடமை பட்டிருக்கிறேன்” என்றார்.

 

தமிழர் ஒருவரை பிரதமராக்க வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, ''நான் கேட்ட எந்த கேள்விக்கும் அமித்ஷா பதில் சொல்லவில்லை. தமிழர் ஒருவரை பிரதமராக்குவோம் என சொல்லியிருப்பது உள்ளபடியே மகிழ்ச்சியாக இருக்கிறது. மோடி மீது என்ன கோபமோ தெரியவில்லை. 2024 ஆம் ஆண்டு பாஜகவினுடைய பிரதமர் வேட்பாளராக தமிழர்கள் வரவேண்டும் என்ற எண்ணம் இருந்தால், தமிழிசை இருக்கிறார்கள்; முருகன் இருக்கிறார்; ஒருவேளை அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்  என்று நான் நினைக்கிறேன்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.