Advertisment

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் (74) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று பி.எச்.பாண்டியன் காலமானார்.

நெல்லை சேரன்மாகாதேவியை சேர்ந்த பி.எச்.பாண்டியன், 1977, 1980, 1984 ஆண்டுகளில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கட்சியின் சார்பாக தமிழ்நாட்டுச் சட்ட மன்ற உறுப்பினராக இருந்தவர் என்பதும் 1985 முதல் 1989 வரை சபாநாயகராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது உடலுக்கு திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி, விசிக தலைவர் தொல்.திருமாவளவன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

Advertisment