Advertisment

டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்க மறுத்த எடப்பாடி பழனிசாமி

edapadi palanisamy refused to stay at delhi tamilnadu house

வளர்ந்த நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை நல்கும் வகையில் கடந்த 1999 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜி20அமைப்பில்அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் என இருபது நாடுகள் இதன்உறுப்பினர்களாக உள்ளன.ஜி20 அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடுகள் சுழற்சி முறையில் ஆண்டுதோறும் ஒவ்வொருநாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த ஆண்டுக்கான தலைமைப் பொறுப்பை இந்தியாஏற்றுள்ள நிலையில், டெல்லியில் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் அதன் உச்சி மாநாடுநடைபெற உள்ளது. இந்தியாவுக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்பின் மூலம் ஜி20உச்சி மாநாட்டைசிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ள மத்திய அரசு அதற்கானமுன்னேற்பாடுபணிகளை தற்போதிருந்தேதொடங்கியுள்ளது.

Advertisment

இந்த உச்சி மாநாட்டுக்குமுன்னதாகநாட்டின் பல பகுதிகளிலும் 200க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னேற்பாடு கூட்டங்களை நடத்த முடிவு செய்து, அதுதொடர்பாக ஆலோசனைக் கூட்டத்தை மத்திய அரசுடெல்லியில்நேற்று நடத்தியது. கூட்டத்தின் போது மாநாட்டின் முக்கிய அம்சமாக, தீவிரவாதத்தடுப்பு நடவடிக்கை, சுற்றுச்சூழல்பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த பிரிவுகளில் ஜி20 கூட்டமைப்பைஎவ்வாறு வலுப்படுத்துவது என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. கூட்டத்தின் போது வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சார்பில், ஜி20 உச்சி மாநாடு திட்டங்கள் குறித்த அறிக்கையும்தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இந்நிலையில், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர்அமித்ஷா, மத்திய நிதித்துறைஅமைச்சர் நிர்மலா சீதாராமன்,காங்கிரஸ்கட்சியைச் சேர்ந்தமல்லிகார்ஜூன கார்கே மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சித்தலைவர்கள்எனப் பலரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும்கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இருவரும் நேற்று டெல்லி சென்றிருந்தனர். பொதுவாக அரசு முறை பயணமாக டெல்லி செல்லும் மக்கள் பிரதிநிதிகள், அரசு செயலாளர்கள், மற்றஉயர் அதிகாரிகள் அங்கு உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்குவது வழக்கம். தமிழ்நாடுஇல்லத்தில் மு.க.ஸ்டாலின்தங்கி இருந்தநிலையில், எடப்பாடி பழனிசாமி அங்கு தாங்காமல் தனியார் விடுதியில் தங்கி இருந்தார். எதிர்க்கட்சி தலைவருக்கு என தனியாக அறைகள் இருக்கும் போது, அவர் அங்கு தாங்காமல் தனியார் விடுதியில் தங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Delhi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe