Skip to main content

அமமுக எல்லாம் ஒரு கட்சியா? பிறக்காத குழந்தைக்கு பேரு வெச்ச மாதிரி....- முதல்வர் பழனிசாமி நக்கல்!

Published on 22/03/2019 | Edited on 22/03/2019

அமமுக எல்லாம் ஒரு கட்சியே இல்லை. பிறக்காத குழந்தைக்கு பெயர் வைத்ததுபோல் அமமுகவின் நிலைமை உள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேலியாக குறிப்பிட்டார்.

 

edapadi palanisamy countered on ttv dinakaran


சேலத்தில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம், புதன்கிழமை (மார்ச் 20, 2019) நடந்தது. பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:


தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க வேண்டும் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறோம். இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துவோம். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம்கட்டப் பணிகளை தொடங்க அனுமதி கேட்கப்பட்டு உள்ளது. அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும். 


ஏற்கனவே சட்டசபையில் தெரிவித்தபடி, கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவோம். திமுக தேர்தல் அறிக்கை, பொய்யானது. அவர்கள் சொல்வார்கள்; ஆனால் செய்யமாட்டார்கள். ஆனால் நாங்கள் அப்படியல்ல. சொல்லமாட்டோம். ஆனால் செய்துவிடுவோம். தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடியை தமிழகத்திற்கு அழைத்துள்ளோம். நான்கு மாவட்டத் தலைநகரங்களில் பிரச்சார கூட்டங்களில் அவர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


அமமுக எல்லாம் ஒரு கட்சியே இல்லை. இன்னும் பிறக்காத குழந்தைக்கு பெயர் வைத்தது போல் இருக்கிறது அமமுகவின் நிலைமை. அக்கட்சி இன்னும் பதிவு செய்யப்படவில்லை. இன்னும் அவர்களுக்கு சின்னம்கூட கிடைக்கவில்லை. ஊடகங்களில் வெளியாவதெல்லாம் கருத்துக்கணிப்புகள் இல்லை. அது, கருத்து திணிப்பாகத்தான் இருக்கிறது. 


கடந்த சட்டமன்ற தேர்தலின்போது சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளில் 3 இடங்களில்தான் அதிமுக வெல்லும் என்றார்கள். ஆனால், பத்து தொகுதிகளில் வெற்றி பெற்றோம். சென்ற மக்களவை தேர்தலில் 39 இடங்களில் போட்டியிட்டு 37 இடங்களில் வெற்றி பெற்றோம். இப்போது எங்கள் கூட்டணியில் உள்ள பாமக ஒரு தொகுதியிலும், பாஜக ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது. அவையும் சேர்த்து, இந்த தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார். 
 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

விசாரணைக் கைதி மரணம்; எடப்பாடி பழனிசாமி கண்டனம்!  

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tiruvallur incident Edappadi Palaniswami condemned

விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள  எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டையில் காவல்துறை விசாரணைக் கைதி சாந்தகுமார் என்பவர் காவல்நிலையத்தில் உயிரிழந்ததாகவும், பிரேத பரிசோதனையில் அவர் உடம்பில் ரத்தக்கட்டு, வீக்கம் உள்ளிட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வருகின்ற செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே தமிழ்நாட்டில் காவல் மரணங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், இதுவரை அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவல் மரணங்கள் குறித்த திரைப்படங்கள் மட்டும் பார்த்துவிட்டு தன் மனம் அதிர்ந்து போனதாக நீலிக்கண்ணீர் வடிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு எனது கடும் கண்டனம். பொதுமக்களிடமும், விசாரணைக் கைதிகளிடமும் சட்டத்தின் வரையறைகளுக்கு உட்பட்டு மட்டுமே நடந்துகொள்ள வேண்டுமென காவல்துறையினரையும், அதற்கான உரிய உத்தரவுகளை காவல்துறைக்கு பிறப்பிக்குமாறு முதல்வரையும் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.